வேலை நேரம் போக மற்ற நேரங்களில் வெளி நிறுவனங்களில் வேலை? Swiggy-யின் அதிரடி அறிவிப்பு!
இந்தியாவில் தற்போது அனைத்து வேலைகளும் ஆன்லைன் மூலமாக நடைபெறுகிறது. அந்த வகையில் உணவு டெலிவரிகளும் போன் மூலமாகவே செய்யப்படுகிறது. இந்தியாவில் பிரபலமான ஸ்விக்கி நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஸ்விக்கி நிறுவனம்:
இந்தியாவில் மற்ற நாடுகளை போலவே தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அதாவது மக்கள் இருந்த இடத்தில் இருந்தே அனைத்து வேலைகளையும் செய்ய பழகி விட்டனர். குறிப்பாக உணவு முதல் ஆடைகள், மளிகை பொருட்கள், மருந்துகள், போன்றவைகளை வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கி கொள்கின்றனர். இதனால் பல ஆன்லைன் நிறுவனங்கள் நாட்டில் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களில் லட்சக்கணக்கான ஊழியர்கள் முழுநேரமாகவும், பகுதி நேரமாகவும் பணியாற்றி வருகின்றனர்.
தமிழகத்தில் மின் கட்டணம் குறைக்கப்படுமா? மக்களிடம் கருத்து கேட்புக்கு மத்தியில் அமைச்சர் பேட்டி!
அந்த வகையில் இந்தியாவில் உணவு டெலிவரி செய்வதில் சிறந்த நிறுவனமான ஸ்விக்கி நிறுவனத்தில் 3 லட்சத்திற்கும் மேலான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் 5,000 முழுநேர ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவற்றில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் மட்டும் 3 லட்சம் பேர் உள்ளனர். இந்தியாவில் கடந்த மூன்று வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வருகின்றனர். தற்போதைய சூழலில் தனியார் நிறுவனங்கள் ஊழியர்கள் விரும்பும் வசதிகளை வழங்கி அவர்களை தக்க வைக்கும் முயற்சியில் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு புதிய சலுகை ஒன்றினை அறிவித்துள்ளது. அதாவது, ஸ்விக்கி ஊழியர்கள் அலுவலக நேரம் போக மற்ற நேரங்களில் வெளி நிறுவனங்களில் வேலை பார்த்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. மேலும் தொழில் ரீதியாக ஸ்விக்கி நிறுவனத்துக்கு போட்டியாக உள்ள நிறுவனங்களில் வேலை பார்க்க கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளது. இதை தவிர ஸ்விக்கி வேலை நேரத்தில் மற்ற வேலைகளை பார்க்க அனுமதி கிடையாது என்றும் தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்