தமிழகத்தில் மின் கட்டணம் குறைக்கப்படுமா? மக்களிடம் கருத்து கேட்புக்கு மத்தியில் அமைச்சர் பேட்டி!
தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்துவது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
மின் கட்டணம்
தமிழகத்தில் நாட்டில் நிலவும் பண வீக்கத்தின் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வீட்டு வரி, சொத்து வரி உள்ளிட்ட பல வரிகள் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்த உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. அதனால் வீட்டு வாடகை, கடை வாடகை மற்றும் சிறு குறு தொழில்களில் பாதிப்பு ஏற்படக்கூடும்.
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை (ஆகஸ்ட் 24) ஆன்லைன் மாதிரித்தேர்வு!
அதனால் பொதுமக்களிடம் மின் கட்டண உயர்வு தொடர்பாக கருத்து கேட்ட பிறகு முடிவு செய்யப்படும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. அந்த வகையில் தற்போது பொது மக்களிடம் ஆன்லைன் வாயிலாகவும் நேரடியாகவும் கருத்து கேட்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் மதுரை, கோவை, சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் மக்களிடம் கருத்து கேட்பு நடைபெற்றது. இதில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன் ஆன்லைன் வாயிலாக பெறப்பட்ட கருத்து கேட்பிலும் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் சென்னை கலைவாணர் அரங்கிலும் நேற்று கருத்து கேட்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான மக்களிடம் இருந்து எதிர்ப்பு பெறப்பட்டுள்ளது. அத்துடன் இவை அனைத்தும் எழுத்துபூர்வமாகவும் பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவையில் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருப்பதாவது, தமிழகத்தில் மின் கட்டணம் குறைப்பது தொடர்பாக மக்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என்று உறுதியாக தெரிவித்துள்ளார். அதனால் தமிழகத்தில் மின் கட்டணம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்