வங்கி கடன் தவணை (EMI) செலுத்த அவகாசம் நீட்டிப்பு – உச்ச நீதிமன்றம் தலையிட மறுப்பு!!
வங்கி கடன் தவணை காலத்தை நீட்டிக்கும் விவகாரத்தில் தலையிட முடியாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
வங்கி கடன் தவணை:
கொரோனா வைரஸ் தொற்று கடந்த வருடம் முதல் பரவி வருகிறது. கடந்த 2020 மார்ச் மாதம் நோய் பரவலை தடுக்க நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பல நிறுவனங்கள் பாதிப்படைந்தது. மிகப்பெரிய பொருளாதார சிக்கல் ஏற்பட்டது. பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் கொரோனா அச்சத்தால் பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக தொழில் துறையினர் நஷ்டத்தில் இருந்தது மீண்டு வர முடியவில்லை.
பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பணம் எடுக்கும் வசதி!
சிறு, குறு வர்த்தக நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்பட்டது. இந்த வருடமும் கொரோனா வைரஸ் அதிக வீரியத்துடன் பரவி வருகிறது. இதனால் மாநிலங்கள் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கை அமலில் வைத்துள்ளன. இதனால் தொழில் நிறுவனங்கள் அதிக லாபம் இன்றி, உரிய வருவாய் இல்லாமல் அதிகம் பாதிப்படைந்துள்ளன. வருவாய் இல்லாததால் நிறுவனங்கள் வங்கிகளில் வாங்கிய கடனை உரிய காலத்தில் திரும்பி செலுத்த முடியாத நிலையில் உள்ளன.
TN Job “FB Group” Join Now
இதனால் இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வருடம் வங்கி கடன் தவணையை திருப்பி செலுத்த 6 மாத கால அவகாசம் அளித்தது. தற்போது இரண்டாம் கொரோனா அலையால் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் கடன் தவணை காலத்தை நீட்டிக்க கோரி வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தலையிட முடியாது, தேவையென்றால் ரிசர்வ் வங்கியிடம் இது தொடர்பாக மனுதாரர் கோரிக்கை வைக்கலாம் என தெரிவித்த நீதிபதிகள், ஜூன் மாதம் 11ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உள்ளனர்.