ஜூன் 15ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு – தனியார் கல்வி நிறுவனங்கள் கோரிக்கை!!
மாநிலத்தில் ஜூன் 15ம் தேதி பள்ளிகளை திறப்பதற்குள் கர்நாடகா மாநில அரசு தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தனியார் பள்ளிகளின் கோரிக்கைகள்:
கர்நாடக தனியார் பள்ளி நிர்வாகங்கள், ஆசிரியர்கள் மற்றும் கற்பித்தல் அல்லாத பணியாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. இந்த குழுவின் தலைவர் சஷி குமார் அவர்கள் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாகவே உள்ளது. கர்நாடக வாரிய பள்ளிகளில் 2% அளவிலான சேர்க்கையை மட்டுமே பெற்றுள்ளது. ஜூன் 7ம் தேதி ஊரடங்கு நீக்கப்பட்டு, ஜூனர் 15 தேதிக்குள் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்றாலும், பெற்றோர்கள் கட்டணம் செலுத்த அவகாசம் இருக்காது.
வங்கி கடன் தவணை (EMI) செலுத்த அவகாசம் நீட்டிப்பு – உச்ச நீதிமன்றம் தலையிட மறுப்பு!!
அடுத்த கல்வி ஆண்டின் சேர்க்கைக்காக அரசின் உத்தரவிற்காக பள்ளிகள் காத்திருக்க வேண்டி இருந்தது. 1 முதல் 9 ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்பட்டதால் பெற்றோர்கள் கல்விக்கட்டணம் செலுத்த தயங்குகின்றனர். கட்டணம் செலுத்தாதவர்களும் அடுத்த வகுப்பிற்கு தேர்வாகியுள்ளதால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மாநிலத்தில் ஆசிரியர்கள் மற்றும் கற்பித்தல் பணியில் இல்லாத ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக தனியாக ஒரு போர்டல் இன்னும் தொடங்கப்படவில்லை. மேலும், அவர்களுக்காக ரூ.10,000 நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.