TNPSC குரூப் 2 தேர்வெழுத உள்ளோருக்கு சூப்பர் அறிவிப்பு – சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
தமிழகத்தில் TNPSC குரூப் 2, 2A தேர்வு ஈரோடு மாவட்டத்தில் நாளை தேர்வு நாளை (மே 21) 117 மையங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வை முன்னிட்டு தேர்வர்கள் விரைவில் தேர்வு மையத்தை அடையும் வகையில் அம்மாவட்டத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
குரூப் 2, 2A தேர்வு:
தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக அரசுத்துறை போட்டித்தேர்வுகள் ஏதும் நடத்தப்படவில்லை. இதனால் அரசு துறைகளில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை பூர்த்தி செய்யும் பொருட்டு TNPSC குரூப் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியானது. முதல் கட்டமாக கடந்த மார்ச் மாதம் குரூப் 2, 2A தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆன்லைன் வாயிலாக விண்ணப்ப பதிவுகள் நடைபெற்றது. 2 வருடங்களுக்கு பிறகு தேர்வு நடைபெற உள்ளதால் சுமார் 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி நாளை (மே 21) சனிக்கிழமை அன்று தேர்வு நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு நடைபெற இருப்பதால் தேர்வாணையம் முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் நாளை 117 மையங்களில் குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. மேலும் 35,619 பேர் தேர்வை எழுத உள்ளனர். அதுமட்டுமின்றி தேர்வு எழுத உள்ளோர் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 9 மணிக்கு மேல் வருபவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படாது என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
CBSE 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஆண்டு இறுதி தேர்வுகள் மீண்டும் திருத்தம்!
இந்த நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. நாளை தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்கும் வகையில் ஈரோட்டில் தேர்வை கண்காணிக்க 8 பறக்கும் படை அலுவலர்கள், 29 நடமாடும் குழு, 120 ஒளிப்பதிவாளர்கள், 234 கண்காணிப்பு அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். எனவே தேர்வு எழுதுபவர்கள் தங்களின் தேர்வுக்கூட அனுமதி சீட்டு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை என ஏதாவது ஒன்றின் பிரதி மற்றும் அசல் எடுத்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.