தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிடையாது – புதிய வழிகாட்டுதல்கள் அறிவிப்பு!

0
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிடையாது - புதிய வழிகாட்டுதல்கள் அறிவிப்பு!
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிடையாது - புதிய வழிகாட்டுதல்கள் அறிவிப்பு!
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிடையாது – புதிய வழிகாட்டுதல்கள் அறிவிப்பு!

தமிழகத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற முதல்வர் ஆலோசனை கூட்டத்தில் பள்ளி கல்லூரிகள் பிப்ரவரி 1 முதல் திறக்கப்படும், மற்றும் நேற்று முதல் இரவு ஊரடங்கு தடை , வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் உத்தரவு:

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக மக்களின் நலன் அடிப்படையில் இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்திருந்தார் . இந்த வகையில் கொரோனா இரண்டாம் அலைக்கு பின் திறக்குபட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டது. தொற்றின் தினசரி பாதிப்பு அதிகரிப்பு மற்றும் ஊரடங்குகள் நிறைவு பெற உள்ள நிலையில் நேற்று முன் தினம் முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

TNPSC தேர்வெழுத விண்ணப்பித்த அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – பிப்ரவரி 1 முதல் துவக்கம்!

அந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1 முதல் திறக்கப்படும் மற்றும் இரவு ஊரடங்கு தடை, மேலும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு கிடையாது என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்த வகையில் நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு க்கு தடை ஆகும். இந்த நிலையில் சமுதாய, கலாச்சார, அரசியல் கூட்டங்கள் போன்ற மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு மட்டும் தடை தொடரும். மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிப்.1 முதல் பள்ளிகள் திறப்பு குறித்த முக்கிய அறிவிப்பு – வழிகாட்டு நெறிமுறைகள்!

மழலையர் பள்ளிகள் திறக்க அனுமதி இல்லை. மேலும் கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 7ம் தேதி முதல் கடலூர் மாவட்டத்தில் உள்ள 1640 கோவில்களும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டு இருந்தது. முதல்வர் ஊரடங்கு தளர்வு அறிவிப்பின் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் கடலூர் பாடலீஸ்வரர், வரதராஜபெருமாள், திருவந்திபுரம் தேவநாதசுவாமி, திட்டக்குடி வைத்தியநாத சுவாமி, விருத்தாசலம் கொளஞ்சியப்பர், பெண்ணாடம், பிரளயகாலேஸ்வரர், சிதம்பரம் தில்லை காளியம்மன், சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் ஆகிய 1640 கோவில்கள் நேற்று முதல் திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மாஸ்க் அணிதல் மற்றும் சமூக இடைவெளி அடிப்படையில் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!