தமிழகத்தில் பிப்.1 முதல் பள்ளிகள் திறப்பு குறித்த முக்கிய அறிவிப்பு – வழிகாட்டு நெறிமுறைகள்!
தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் தற்போது குறைந்து வருவதால் பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை தொடர்ந்து பள்ளிகள் செயல்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
பள்ளி திறப்பு
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் முறையில் பாடங்களை கற்று வந்தனர். இதையடுத்து கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் கடந்த நவம்பர் மாதம் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் நேரடி முறையில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் தொற்று வேகமாக பரவ தொடங்கியது. அத்துடன் தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் தொடங்கியது.
மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி: சீனாவை வீழ்த்தி வெண்கலம் வென்றது இந்தியா – ரசிகர்கள் உற்சாகம்!
அதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் மாணவர்களின் நலன் கருதி மீண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் சற்று குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில், மேலும் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து வகையான பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? முக்கிய கணக்கீட்டு விவரங்கள் இதோ!
இதனை தொடர்ந்து பள்ளி கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் கூறியதாவது, தமிழகத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து வகையான பள்ளிகளும் திறக்கப்பட்டு 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி முறையில் வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் அனைத்து வகையான பள்ளிகளும் அரசு அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும். அதற்கான ஆயத்த பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.