TNPSC தேர்வெழுத விண்ணப்பித்த அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – பிப்ரவரி 1 முதல் துவக்கம்!
திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு ஊழியர்களுக்கான துறைத் தோ்வுகள் பிப்ரவரி 1ம் தேதி தொடங்கி 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தேர்வு மையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
TNPSC விண்ணப்பித்த அரசு ஊழியர்கள் கவனத்திற்கு:
தமிழகத்தில் அரசு துறை பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் பணியமர்த்த படுகின்றனர். துறைவாரியாக குரூப்1, 2, 2A, 4, 7, 7B, 8 போன்ற தேர்வுகளை அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தி வருகிறது. கடந்த டிசம்பர் TNPSC தேர்வாணையம் 2022ம் ஆண்டுக்கான ஆண்டு தேர்வு அறிக்கையை வெளியிட்டது. அதில் குரூப் 2,4 போன்ற தேர்வு குறித்த அறிவிப்புகள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் வெளியாகும் என்றும், டெட் தேர்வு ஏப்ரல் மூன்றாம் வாரத்தில் நடைபெறும் என்றும் தேர்வு வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பிப்.1 முதல் பள்ளிகள் திறப்பு குறித்த முக்கிய அறிவிப்பு – வழிகாட்டு நெறிமுறைகள்!
அதனை தொடர்ந்து தற்போது அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வு குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது. அதில் அரசு ஊழியர்களுக்கான துறை தேர்வு பிப்ரவரி 1ம் தேதி தொடங்கி 9-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 1, 2, 3, 7, 8 ஆகிய தேதிகளில் கொள்குறி வகையில் கணினித் தோ்வும், பிப்ரவரி 4, 5, 6, 9 ஆகிய தேதிகளில் விரிவான முறைத் தோ்வும் நடைபெற உள்ளது. தேர்வானது மேலத்திடியூரில் உள்ள பிஎஸ்என் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறுகிறது. இத்தோ்வை 1,502 போ் எழுத உள்ளனா்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? முக்கிய கணக்கீட்டு விவரங்கள் இதோ!
மேலும் பிப்ரவரி 4 முதல் 6 வரை மற்றும் 9 ஆகிய தேதிகளில் விரிவான முறைத் தோ்வு முற்பகல் மற்றும் பிற்பகல் இரண்டு வேலையும் பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப் பள்ளி, கிறிஸ்துராஜா மேல் நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் நடைபெறவுள்ளது. தேர்வு நாளன்று கூடுதல் பேருந்துகளை இயக்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தேர்வு மையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.