IPL அப்டேட் : வார்னர் எந்த அணிக்கும் கேப்டனாக வாய்ப்பில்லை – ஆகாஷ் சோப்ராவின் ஷாக் ரிப்போர்ட்!

0
IPL அப்டேட் : வார்னர் எந்த அணிக்கும் கேப்டனாக வாய்ப்பில்லை - ஆகாஷ் சோப்ராவின் ஷாக் ரிப்போர்ட்!
IPL அப்டேட் : வார்னர் எந்த அணிக்கும் கேப்டனாக வாய்ப்பில்லை - ஆகாஷ் சோப்ராவின் ஷாக் ரிப்போர்ட்!
IPL அப்டேட் : வார்னர் எந்த அணிக்கும் கேப்டனாக வாய்ப்பில்லை – ஆகாஷ் சோப்ராவின் ஷாக் ரிப்போர்ட்!

2022 இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) தொடரில் மூன்று அணிகள் கேப்டனைத் தேடி வரும் நிலையில், ஆஸ்திரேலிய தொடக்க வீரரும் முன்னாள் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டனுமான வார்னருக்கு வாய்ப்பளிக்க வேண்டாம் என்று முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா பேட்டியளித்துள்ளார்.

ஆகாஷ் சோப்ரா விளக்கம்:

15 வது சீசன் IPL தொடர் மார்ச் 27 ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு IPL தொடரில் புதிதாக லக்னோ, அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் பங்கு பெறுகிறது. சமீபத்தில் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைக்கப் போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் ஒரு சில அணிகள் இதற்கு முன் அவ்வணிக்கு கேப்டன் செய்த வீரர்களை தக்க வைக்கவில்லை. இதனால் மெகா ஏலத்தில் சிறந்த வீரரை எடுத்து கேப்டனாக நியமிக்க திட்டமிட்டுள்ளனர். இதை தொடர்ந்து புதிதாக சேர்க்கப்பட்ட 2 அணிகளும் வீரர்களை ஒப்பந்தம் செய்யும் பணியை முடித்துவிட்டு கேப்டனையும் தேர்வு செய்துள்ளன.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிடையாது – புதிய வழிகாட்டுதல்கள் அறிவிப்பு!

அகமதாபாத் அணிக்கு ஹர்த்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து லக்னோ அணிக்கு லோகேஷ் ராகுல் கேப்டனாக தேர்வாகியுள்ளார். இந்த 2 அணிகளை தவிர்த்து மீதம் உள்ள 8 அணிகளில் 5 அணிகள் கேப்டனை தக்கவைத்து கொண்டது. தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) ஆகிய 3 அணிகளும் கேப்டனை நியமிக்க அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் IPL அணிகளின் கேப்டன் தேர்வுகள் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய BCCI அதிகாரியும் ஆகிய ஆகாஷ் சோப்ரா பேட்டியளித்துள்ளார்.

TNPSC தேர்வெழுத விண்ணப்பித்த அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – பிப்ரவரி 1 முதல் துவக்கம்!

அதில் ஆஸ்திரேலிய தொடக்க வீரரும் முன்னாள் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டனுமான வார்னருக்கு கேப்டன் பதவி கொடுக்க வேண்டாம் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் வார்னர் முதல் இரண்டு ஆட்டங்களில் விளையாடினார், இருப்பினும், இரண்டிலும் ஒற்றை இலக்க ஸ்கோர்கள் மட்டும் எடுத்ததால் ஜேசன் ராய் பிளேயிங் 11 யில் அவரது இடத்தைப் பிடித்தார். 35 வயதான அவர் டி20 உலகக் கோப்பையில் 289 ரன்களுடன் மீண்டும் பார்முக்கு திரும்பினார். அதைத் தொடர்ந்து ஆஷஸ் தொடரில் இரண்டு 90-க்கும் அதிகமான ஸ்கோர்கள் உட்பட 273 ரன்கள் எடுத்தார். இதனால் கேப்டன் பொறுப்பு இல்லாமல் வார்னர் சிறப்பாக விளையாடி உள்ளதால் நடப்பு ஐபிஎல் தொடரில் வார்னருக்கு கேப்டன் பதவி கொடுக்க வேண்டாம் என்று ஆகாஷ் சோப்ரா பேட்டியளித்தார்

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!