300 எபிசோடுகளை கடந்து வெற்றி படைக்கும் சன்டிவியில் ‘திருமகள்’ சீரியல் – லைவில் நன்றி தெரிவித்த ஹீரோ!
சன்டிவியில் முற்பகல் நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் திருமகள் சீரியல் தற்போது அதிக எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இதற்காக சீரியலின் ஹீரோ ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.
திருமகள் சீரியல்:
சீரியல் என்றாலே முன்னொரு காலத்தில் அது சன்டிவி மட்டும் தான். சமீப காலங்களில் தான் மற்ற தொலைக்காட்சிகளின் சீரியல்கள் பேசப்படுகின்றது. முன்பிருந்து சன்டிவியில் சீரியல் பார்க்கும் ரசிகர்கள் அதில் வரும் அனைத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட தொடர்களை வெற்றி பெறச் செய்ய தயங்குவதில்லை. அந்த வகையில் 20 வருடங்களை கடந்தும் வெற்றி பெற்ற பழைய தொடர்களை மீண்டும் மறு ஒளிபரப்பு செய்து வந்தால், அதையும் டிஆர்பி வரிசையில் முன்னணி பெறச்செய்து விடுகின்றனர்.
தமிழகத்தில் அம்மா மருந்தகங்கள் மூடல் – கூட்டுறவு சங்க பதிவாளர் விளக்கம்!
தற்போது கடந்த ஊரடங்கு காலத்தில் தொடங்கப்பட்ட திருமகள் என்ற சீரியல் பயங்கர எதிர்பார்ப்புடன் தொடங்கியது. முற்பகல் 12:30 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியலின் கதையம்சம் சற்று வேறு பட்டதாக இருந்தது. அதவாது ஒரே நேரத்தில் பிரசவமாகும் இரண்டு அம்மாக்களின் குழந்தைகளும் அவர்களுக்கு தெரியாமல் மாற்றப்படுகிறது. இவர்கள் வளர்ந்து காதலித்து திருமணமும் செய்து கொள்கின்றனர். இதனால் இவர்களின் சொந்த அப்பா அம்மாவே இவர்களுக்கு மாமியார், மாமனார் ஆகின்றனர். இதில், நடுவில் பல சுவாரஸ்யமான சம்பவங்களும் வரும்.
தாமரையை ப்ரியங்காவின் கண்ணாடியாக மாற்றிய கமல் – அதிரடி டிவிஸ்ட்!
மேலும், சீரியல் தொடங்கப்பட்ட பின்னர் பல காரணங்களினால் அதில் நடிக்கும் நடிகர், நடிகையர் மாற்றம் செய்யப்பட்டனர். இருப்பினும், பல தடைகளையும் கடந்து சீரியல் தற்போது 300 எபிசோடுகளை கடந்துள்ளது. இதற்க்கு திருமகள் சீரியல் ஹீரோ சண்முக சுந்தரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் வீடியோ பகிர்ந்து அதில் ரசிகர்களுக்கும், இந்த வாய்ப்பை அளித்ததற்காக சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் சார் மற்றும் செல்வி மேம் மற்றும் சன் டிவிக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.