சன் டிவி ‘ரோஜா’ சீரியல் அர்ஜுன் யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!

0
சன் டிவி 'ரோஜா' சீரியல் அர்ஜுன் யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!
சன் டிவி 'ரோஜா' சீரியல் அர்ஜுன் யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!
சன் டிவி ‘ரோஜா’ சீரியல் அர்ஜுன் யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!

சன் டிவியில் மக்களின் வரவேற்பை பெற்ற ரோஜா சீரியலில் சிபு, சூர்யன் பிரியங்கா ராவுடன் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . அவர் பற்றிய தகவல்களை இப்பதிவில் காணலாம்.

ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்:

சன் தொலைக்காட்சி பல்வேறு கதைக்களங்களில் சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் சின்னத்திரையில் டாப் சீரியலில் ஒன்றாக “ரோஜா”இ ருந்து வருகிறது. வாரம்தோறும் டிஆர்பியில் முதலிடம் அல்லது இரண்டாவது இடத்தில் நீடித்து வருகிறது. ரோஜா சீரியல் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு இடையே தான் தொடர்ந்து போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. ரோஜா சீரியலில் அர்ஜுன் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவர் இயற்பெயர் சிபு சூர்யன். சிபு சூர்யன் 1990ம் ஆண்டு மார்ச் 26 ம் தேதி கர்நாடகாவில் ஸ்ரீமஹா என்ற இடத்தில் பிறந்துள்ளார். அவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை கர்நாடகாவில் “பெங்களூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி”யில் பயின்றார்.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வர இருக்கும் ட்விஸ்ட் – எழில் படப்பிடிப்பை பார்க்கும் குடும்பம்!

கல்லூரி படிப்பு முடித்தவுடன் சிபு சூர்யன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அச்சமயம் அவர் தனது நண்பர்களுடன் வார இறுதி நாட்களில் வெளியில் செல்வது வழக்கமாக வைத்திருப்பாராம். அப்போது நண்பர்களுடன் வெளியில் செல்லும் போது ஒரு எழுத்தாளர், சிபு சூரியனை பார்த்து நீங்கள் பார்ப்பதற்கு ஹீரோ போல் இருக்கிறீர்கள். நீங்கள் சினிமாவில் நடிக்க முயற்சி பண்ணலாமே என அவர் கூறினார். அதை கேட்டு சிபு மற்றும் அவர் நண்பர்கள் சிரித்தனர். அதற்கு எழுத்தாளர் சிபுவின் போன் நம்பரை வாங்கிக் கொண்டாராம் அவரது நம்பரை சிபுவிற்கு கொடுத்தாராம். அந்த எழுத்தாளரிடம் இருந்து அடுத்த நாள் “இன்று ஆடிஷன் உள்ளது வந்து விடுங்கள்” என போன் வந்தது.

“பாரதி கண்ணம்மா” சீரியலில் அருமையாக நடிக்கும் வினுஷா, பாராட்டிய இயக்குனர் – பிரவீன் ஓபன் டாக்!

அப்போது சிபு ஆடிஷன் க்கு சென்றாராம். ஆனால் அவருக்கு நடிக்க வரவே இல்லயாம். இருப்பினும் அவர் நடிக்க ஆரம்பித்தார். அதற்கு பின் 2017ம் ஆண்டு சிவ பூஜேனக்ரஹாரா இயக்கிய ஸ்வேதா ஆர் பிரசாத்துடன் இணைந்து ‘ராதா ரமணா’ என்ற கன்னட தொலைக்காட்சி தொடரில் நடிகராக அறிமுகமானார். பின்பு தமிழில் ரோஜா சீரியலில் கமிட் ஆகிவிட்டாராம். அந்த சீரியலில் வக்கீல் ரோல் வழங்கப்பட்டுள்ளது. ஹீரோ, ஹீரோயின் ஒப்பந்த அடிப்படையில் திருமணம் செய்து கொள்ளுமாறு சீரியல் ஆரம்பம் இருந்தது . இப்போது ரோஜா அர்ஜுன் ஜோடி அனைவருக்கும் பிடித்தவை ஆகிவிட்டது. தமிழ் மொழி தெரியாமல் தமிழ் சீரியலில் கமிட் ஆன சிபிக்கு தற்போது தமிழ் ரசிகர்கள் ஏராளம். சிறியவர் முதல் பெரியவர் வரை சிபியை அர்ஜுன் சார் என்று அழைக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!