விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வர இருக்கும் ட்விஸ்ட் – எழில் படப்பிடிப்பை பார்க்கும் குடும்பம்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் சென்ற வாரம் முதல் சமூக கருத்தை மையமாக வைத்து சீரியல் கதை கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் அடுத்து வரும் எபிசோட் குறித்த புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
தமிழ் சின்னத்திரையில் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் சீரியல்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. இந்த சீரியலில் பாக்கியா கதாபாத்திரம் இல்லத்தரசியாக இருந்து இத்தனை காலமாக தன்னுடைய குடும்பத்தை மட்டுமே பார்த்த நிலையில் தற்போது தன்னுடைய ஒவ்வொரு திறமைகளையும் வெளிப்படுத்தி முன்னேறி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, அவரது கணவர் கோபி பாக்கியாவை விவாகரத்து செய்து விட்டு ராதிகாவை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.
“பாரதி கண்ணம்மா” சீரியலில் அருமையாக நடிக்கும் வினுஷா, பாராட்டிய இயக்குனர் – பிரவீன் ஓபன் டாக்!
சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் கோபியின் அப்பா ராமமூர்த்தி கோபியை திட்ட, எங்கே குடும்பத்திடம் உண்மையை சொல்லுங்க என கோபி மிரட்டுகிறார். எழில் ராமமூர்த்தியிடம் இது பற்றி கேட்க, எனக்கு உண்மை தெரியும் என்பதை எழில் சொல்கிறார். தற்போது குடும்பத்தில் இருவர் கோபிக்கு எதிராக இருக்க, அடுத்து என்ன நடக்கும் என்பதே கதையின் திருப்புமுனையாக இருக்கும். தற்போது எழில் படம் எடுக்கும் நிலையில் அதை குடும்பத்துடன் சென்று பார்க்க இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.
“கனா காணும் காலங்கள் 2” சீரியலில் களமிறங்கும் டிக்டாக் பிரபலம் – அவரே வெளியிட்ட எமோஷனல் பதிவு!
இந்த புகைப்படத்தில் பாக்கியா மற்றும் ஜெனி இருக்கின்றனர். சீரியலில் இனி வரும் வாரங்களில் கோபி வீட்டில் சிக்குவாரா பாக்கியாவிற்கு உண்மை தெரிந்தால் என்ன ஆகும் என பல எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. அடுத்து அமிர்தா குடும்பத்தை காட்டாமல் இருப்பதால் அதில் என்ன மாதிரி பிரச்சனை வரும் அமிர்தா எழிலை திருமணம் செய்ய சம்மதிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.