தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இம்மாதம் திருப்புதல் தேர்வு நடைபெற உள்ள நிலையில் இது குறித்து முக்கிய அறிவிப்பை தேர்வுத்துறை ஆணையம் வெளியிட்டுள்ளது.
முக்கிய அறிவிப்பு:
ஒமைக்ரான் தொற்று பரவல் தமிழகத்தில் அதிகரித்து வருவதால் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் பொதுத்தேர்வு ரத்தாகி விடுமோ என்று மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இந்நிலையில் ஜனவரி முதல் வாரத்தில் திருப்புதல் தேர்வு தொடங்கி விடும் என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இத்தேர்வுக்கான கால அட்டவணை சமீபத்தில் வெளியானது. தற்போது திருப்புதல் தேர்வு விடைத்தாள் மிதிப்பீடு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஞாயிற்று கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை – பொதுமக்கள் கவனத்திற்கு!
2020 ஆண்டு கொரோனா வைரஸ் அதிகரிப்பால் பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு நோய்த்தொற்று குறைந்து காணப்பட்டதால் செப்டம்பர் மாதத்தில் இருந்து பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் வைரஸ் தொற்றும் அதிகமாக பரவி வருவதால் மீண்டும் மாணவர்களுக்கு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.தமிழக அரசு அறிவிப்பின்படி 10, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வந்து செல்கின்றன.
தமிழகத்தில் இராணுவ வீரர்களுக்கு இசிஎச்எஸ் துறையில் வேலைவாய்ப்பு – ஜன.12ம் தேதி கடைசி நாள்!
இந்நிலையில் தமிழகத்தில் 10 ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு ஜனவரி 19 ஆம் தேதியிலும், 12 ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு ஜனவரி 20 ஆம் தேதியிலும் தொடங்கவுள்ளது. இத்திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை தேர்வு எழுதிய அதே பள்ளியில் மதிப்பீடு செய்யக்கூடாது என்று தேர்வுத்துறை ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் ஒரே பள்ளியில் மதிப்பீடு செய்யாமல் வெவ்வேறு பள்ளிகளுக்கு இடையே விடைத்தாள்களை பரிமாற்றம் செய்து மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.