தமிழகத்தில் ஞாயிற்று கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை – பொதுமக்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் தற்போது அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நியாயவிலை கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.
ரேஷன் கடைக்கு விடுமுறை:
தமிழகத்தில் கடந்த ஜன.4ம் தேதி முதல் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் தொகுப்பானது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக டோக்கன் வழங்கபட்டு குறிப்பிட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டும் டோக்கன் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் ஓமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்த நிலையில் இருப்பதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) முடிவு மீண்டும் ஒத்திவைப்பு? வெளியான ஷாக் தகவல்!
அந்த வகையில் தமிழகத்தில் அனைத்து வார நாட்களிலும் இரவு நேர ஊரடங்கும், வாரத்தின் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இன்னும் சில கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கின் போது அத்தியாவசிய தேவைகள் தவிர இதர பணிகளுக்கு யாரும் வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் ஞாயிற்று கிழமைகளில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படாது என்றும், அன்றைய தினம் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை என்றும் தமிழக உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் இராணுவ வீரர்களுக்கு இசிஎச்எஸ் துறையில் வேலைவாய்ப்பு – ஜன.12ம் தேதி கடைசி நாள்!
அதனை தொடர்ந்து அன்றைய தினம் பொங்கல் தொகுப்பு வாங்க உள்ளவர்களுக்கு மாற்று நாட்களில் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பிட்ட நாளில் பொங்கல் தொகுப்பு பெற முடியாவிட்டால் பொங்கல் தினத்திற்கு முன்பு ரேஷன் கடைக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். அவ்வாறு இல்லாமல் தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காக பொங்கலுக்கு முன்பு பொங்கல் தொகுப்பு பெற முடியாதவர்கள் இம்மாத இறுதிக்குள் பெற்றுக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.