டிவி சீரியல் நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கியவர் யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
சின்னத்திரையில் சீரியல்கள் அனைத்துமே நடிகைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தான் எடுக்கப்படுகிறது. அந்த வகையில் இதுவரை சின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்கிய நடிகை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
அதிக சம்பளம்:
வெள்ளித்திரையை பொறுத்த வரையில் நடிகர்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சமீப காலமாக தான் இந்த நிலைமை மாறி வருகிறது. அதேபோல் எடுத்துக் கொண்டால் நடிகைகளுக்கு தான் கதையில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். ஏனென்றால் பெரும்பாலும் இல்லத்தரசிகள் தான் அதிகம் சீரியல்களுக்கு ஆதரவளித்து வந்தனர். இந்த நிலைமை மாறி சின்னத்திரையிலும் கதையில் நடிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் வருகிறது. சின்னத்திரையில் பணியாற்றும் நடிகர்களுக்கு தினசரி அடிப்படையில் சம்பளம் அளிக்கப்படுகிறது.
“பாரதி கண்ணம்மா” சீரியலில் அருமையாக நடிக்கும் வினுஷா, பாராட்டிய இயக்குனர் – பிரவீன் ஓபன் டாக்!
மாதத்தில் பாதி நாட்கள் தான் கால்ஷீட் இருக்கும். சின்னத்திரையில் பல சீரியல்களில் வெள்ளித்திரையில் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்த நடிகைகள் நடித்துள்ளனர். இவர்கள் மூலம் சீரியல்கள் பலத்த வெற்றியை பெறும். தற்போதைய நிலையில் நடிகைகளுக்கு தினசரி ரூ.7,000 முதல் ரூ.25,000 வரை அதிகபட்சமாக சம்பளம் வழங்கப்படுகிறது. சீரியலுக்கு ரசிகர்கள் வரவேற்பு மற்றும் ரேட்டிங் நிலைமை பொறுத்து சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் இதை விட அதிகபட்சமாக ஒரு நடிகை சீரியலுக்கு சம்பளம் பெற்றுள்ளார்.
சன் டிவி ‘ரோஜா’ சீரியல் அர்ஜுன் யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!
2003ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை சன்டி வியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியல் தேவையானி ஒரு நாள் கால்ஷீட்க்கு ரூ.1 லட்சம் சம்பளம் பெற்றுள்ளார். மொத்தம் 1500 எபிசோடுகளுக்கும் மேலாக 6 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக சீரியல் ஓடியுள்ளது. இதனால் தான் தேவயானிக்கு இவ்வளவு அதிக சம்பளம் கிடைத்துள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது ஜீ தமிழில் தேவையானி புது புது அர்த்தங்கள் என்ற சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.