அரசு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு – பள்ளிக் கல்வி இயக்குனர் உத்தரவு!
சண்டிகரில் முன்னதாக கோடை விடுமுறைகள் மே 30 ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் இப்போது அவை மே 23 ஆம் தேதி தொடங்கி ஜூன் 30 வரை தொடரும் என்று சண்டிகரின் பள்ளிக் கல்வி இயக்குனர் பாலிகா அரோரா தெரிவித்துள்ளார்.
கோடை விடுமுறை:
மத்திய கல்வி அமைச்சகம் சமீபத்தில் வெப்ப அலையை சமாளிக்க பள்ளிகள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதில் பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றியமைக்கவும், ஒரு நாளைக்கு மணிநேரத்தை குறைக்கவும் பரிந்துரைக்கப்பட்டது. சூரிய ஒளியில் குழந்தைகளை வெளிப்படுத்தும் விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் பிற வெளிப்புற நடவடிக்கைகளும் அதிகாலையில் திட்டமிடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியது.
திருப்பதி செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு – விஐபி பிரேக் தரிசனம் ரத்து!
இதற்கிடையில் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மே 24 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்புக்கு ஜூன் 15 ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவடையும் என்றும், நகரத்தில் உள்ள தனியார் பள்ளிகள் ஜூன் நடுப்பகுதிக்குப் பிறகு கோடை விடுமுறையை அறிவிக்க உள்ளனர். அரசு பள்ளிகளில் விடுமுறையை முன்னிட்டு வகுப்புகள் நடத்தப்படாவிட்டாலும், திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கோடை விடுமுறைகள் மே 30 ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் இப்போது அவை மே 23 ஆம் தேதி தொடங்கி ஜூன் 30 ஆம் தேதி வரை தொடரும் என்று சண்டிகரின் பள்ளிக்கல்வி இயக்குனர் பாலிகா அரோரா தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
நகரில் கடும் வெப்பம் நிலவி வருவதால் ஆசிரியர்களின் கவலையை கருத்தில் கொண்டு, அரசு பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை யூனியன் அரசு கல்வித்துறை நீட்டித்துள்ளது. கல்வி செயலாளர் பூர்வா கர்க் பிறப்பித்த உத்தரவுகளின் படி, மாணவர்களுக்கு 39 நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்படும். ஆனால் ஆசிரியர்கள் ஜூன் 29ம் தேதி பணிக்கு திரும்ப வேண்டும். அதன் பிறகு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படும். மேலும் ரக்ஷா பந்தன் மற்றும் கர்வா சௌத் ஆகிய இரண்டு உள்ளூர் விடுமுறைகளும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது