திருப்பதி செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு – விஐபி பிரேக் தரிசனம் ரத்து!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தேவஸ்தானம் சாமானிய மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திருப்பதி தரிசனம்:
ஆந்திர மாநிலத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வெளிநாடுகள், மாநிலங்களிலிருந்தும் வருகை புரிவார்கள். அதனால் கொரோனா கால கட்டத்தில் பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்த இலவச தரிசன டிக்கெட் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதனால் கிராமப்புறங்களில் உள்ள பக்தர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
Exams Daily Mobile App Download
கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பக்தர்கள் இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி தற்போது நாள் ஒன்றுக்கு 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வருகை புரிகின்றனர். அதனால் பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்க வார இறுதி நாட்களில் வி.ஐ.பி பிரேக் தரிசனம் நிறுத்தப்பட்டு அந்த சமயத்தில் 40 ஆயிரம் பக்தர்கள் இலவச தரிசனத்தில் அனுமதித்தனர். மேலும் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது. அதனால் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – விரைவில் வெளியாகும் ஹாப்பி நியூஸ்!
இதில் தெரிவித்தாவது, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமானிய மக்கள் சுவாமி தரிசனம் மேற்கொள்வதற்காக விஐபி பிரேக் தரிசனம் வருகிற ஜூலை மாதம் 15ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அஷ்டதள பாத பத்மாராதனை, திருப்பாவாடை உள்ளிட்ட சேவைகளும் ரத்து செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெயிலை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக அவர்களுக்கு பால், மோர், சிற்றுண்டி, உணவு உள்ளிட்டவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சுவாமி தரிசனம் செய்வதற்கு இலவச தரிசன டிக்கெட்டுகளை திருப்பதிக்கு வந்து நேரடியாக பெற்று கொள்ளலாம் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.