பள்ளி மாணவர்களுக்கு மே 23 முதல் ஜூன் 30 வரை கோடை விடுமுறை – அரசு அறிவிப்பு!

0
பள்ளி மாணவர்களுக்கு மே 23 முதல் ஜூன் 30 வரை கோடை விடுமுறை - அரசு அறிவிப்பு!
பள்ளி மாணவர்களுக்கு மே 23 முதல் ஜூன் 30 வரை கோடை விடுமுறை - அரசு அறிவிப்பு!
பள்ளி மாணவர்களுக்கு மே 23 முதல் ஜூன் 30 வரை கோடை விடுமுறை – அரசு அறிவிப்பு!

சண்டிகர் மாநிலத்தில் மே 23ம் தேதியுடன் மாணவர்களுக்கு பள்ளி வேலைநாள் முடிவடைகிறது. மே 23ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை உள்ள 39 நாட்கள் கோடை விடுமுறை என அரசு அறிவித்துள்ளது. மேலும் ஆசிரியர்கள் எந்தெந்த நாட்கள் பள்ளிக்கு வருகை தரவேண்டும் என்பதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

கோடை விடுமுறை:

கடந்த இரண்டு ஆண்டுகளுமே கொரோனா பரவலினால் உலகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமாகத்தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இரண்டு ஆண்டுகளுமே பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எதுவும் நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. ஆன்லைன் மூலமாகத் தான் பாடங்கள் நடத்தப்பட்ட காரணத்தினால் மாணவர்களின் கல்வித் திறன் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இதன் பின்பு கொரோனா பரவல் சற்று குறைந்த காரணத்தினால் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இலவச சீருடை விநியோகம்!

இது மட்டுமல்லாமல் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மாணவர்களும் தேர்வெழுதும் காரணத்தினால் மாணவர்கள் மிகவும் பதட்ட நிலையிலேயே இருக்கின்றனர். இதனால் தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மாணவர்களின் சிரமத்தை குறைக்க 35% வரைக்கும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன. எப்போதும் பள்ளி மாணவர்களுக்கு மார்ச், ஏப்ரல் மாதத்திலேயே அனைத்து பொதுத்தேர்வும் நடத்தி முடித்துவிட்டு மே மாதத்தில் இருந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் வரைக்கும் கோடை விடுமுறை விடப்படும்.

Exams Daily Mobile App Download

ஆனால், இந்த ஆண்டு கொரோனாவினால் காலம் தாழ்த்தி தான் வகுப்புகள் துவங்கப்பட்டன. தற்போது மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், சண்டிகர் மாநிலத்தில் மே 23 ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற இருக்கிறது. மே 23ம் தேதியிலிருந்து ஜூன் 30-ஆம் தேதி வரை உள்ள 39 நாட்கள் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என சண்டிகர் மாநில கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். ஜூன் 29, 30 ஆகிய இரண்டு நாட்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு வேலை நாட்களாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!