1 – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மே 14 முதல் கோடை விடுமுறை!
மாநிலத்தில் நிலவும் அதீத வெப்ப காற்று காரணமாக, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கு மே14 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்படுகிறது என முதல்வர் மான் தெரிவித்துள்ளார். பஞ்சாப் முழுவதும் கடும் வெப்பம் காற்று வீசுவதால் பள்ளி மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வந்ததால், இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோடை விடுமுறை:
கொரோனா இரண்டாவது அலை கடந்த ஆண்டு விஷ்வரூபம் எடுத்தது. இதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதை அடுத்து கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதே போல், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதற்கிடையே, கொரோனா மூன்றாவது அலை தாக்கம் குறைந்ததற்கு பிறகு, கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – விரைவில் வெளியாகும் ஹாப்பி நியூஸ்?
மேலும் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முன்னேற்பாடுகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு விரைவில் கோடை விடுமுறையை அறிவிக்க வேண்டும் என பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை முன்கூட்டியே அந்தந்த மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. நாட்டில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருந்து வருகிறது. வெப்பம் அதிகரித்திருப்பதால் எப்போதும் இல்லாத அளவுக்கு மின் தேவை அதிகரித்திருக்கிறது. இதனால் நாடு முழுவதும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது
Exams Daily Mobile App Download
பஞ்சாப் மாநிலத்தில் நிலவும் கடும் வெப்பத்தின் காரணமாக அங்குள்ள பள்ளிகளுக்கு மே 14 முதல் முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான பகவந்த் மான் வெள்ளிக்கிழமை, எல்லை மாநிலத்தில் கடுமையான மற்றும் திடீர் வெப்பம் காரணமாக, கோடை விடுமுறையின் ஆரம்பம் குறித்து “ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து” பரிந்துரைகள் வந்துள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, மே 14 முதல் மாநிலத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் கோடை விடுமுறையைக் கடைப்பிடிக்க பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளதாக செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது. மேலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்ட அரசு இம்முடிவை எடுத்துள்ளது எனக் கூறியுள்ளார்.