தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – விரைவில் வெளியாகும் ஹாப்பி நியூஸ்?

0
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் - விரைவில் வெளியாகும் ஹாப்பி நியூஸ்?
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் - விரைவில் வெளியாகும் ஹாப்பி நியூஸ்?
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – விரைவில் வெளியாகும் ஹாப்பி நியூஸ்?

தமிழகத்தில் பணி நிரவல் கலந்தாய்வில் பணி அமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அதனால் இந்த ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வலுக்கும் கோரிக்கை

தமிழகத்தில் கொரோனா பேரலையை கட்டுப்படுத்த தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதன் காரணமாக அரசுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை நிறுத்தி வைத்தது. தற்போது நிலைமை ஓரளவு சரியான பின்பு அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி கடந்த 1ம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு 31% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர்.

இந்தியாவின் இம்மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல் – அரசு அதிரடி உத்தரவு!

இதனை தொடர்ந்து தற்போது பெண் அரசு ஊழியர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டால் அவர்களுக்கு 21 நாட்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்து கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து ஆண் அரசு ஊழியர்களுக்கு அவர்களின் மனைவி கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொண்டால் அவர்களுக்கு 7 நாட்கள் வரை சிறப்பு விடுப்பு எடுத்து கொள்ளவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் ஈட்டிய விடுப்பு முறைக்கு அரசு கடந்த 2020ம் ஆண்டு முதல் தடை விதித்துள்ளது. மேலும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லை என்று ஊழியர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் பணி நிரவல் கலந்தாய்வில் பணி அமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு கடந்த 2 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அத்துடன் 2 ஆண்டுகளாக வழங்கப்படாத ஈட்டிய விடுப்பு ஊதியத்தையும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். மேலும் ஆசிரியர்களது உயர்கல்விக்கான ஊக்கத்தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனால் அரசு இது குறித்து விரைவில் ஆலோசனை மேற்கொண்டு அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!