ஜூன் 20ம் தேதியன்று பள்ளிகள் திறப்பு – கோடை விடுமுறை நீட்டிப்பு! இதற்காக தான்?
மத்திய பிரதேச மாநிலத்தில் இப்போது வெப்ப நிலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் ஜூன் 13ம் தேதிக்கு பதிலாக 20ம் தேதியன்று பள்ளிகளை மீண்டுமாக திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மத்தியில் பெரும் நிம்மதி கிடைத்துள்ளது.
விடுமுறை நீட்டிப்பு
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நிலவி வரும் கடுமையான வெப்ப சூழலுக்கு மத்தியில் மக்கள் சந்தித்து வரும் இன்னல்களை கவனத்தில் கொண்டு பெரும்பாலான பள்ளிகளை திறக்கும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதாவது இம்மாநிலத்தில் 45 டிகிரிக்கு மேல் இப்போது வெப்பநிலை பதிவாகி வருவதால் ஜூன் 13 முதல் பள்ளிகளை திறக்கும் நடவடிக்கை குழந்தைகள் மற்றும் பெற்றோரையும் கவலையில் ஆழ்த்தியது. இதை கருத்தில் கொண்ட பள்ளி நிர்வாகங்கள் வகுப்புகளை துவங்கும் தேதியை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்வு எதிரொலி – ஏகப்பட்ட காலிப்பணியிடங்கள் உருவாக்கம்!
இதனால் கோடை வெயிலுக்கு மத்தியில் குழந்தைகள் எப்படி பள்ளிக்கு செல்வார்களோ என்ற கவலைக்கு மத்தியில் பெற்றோர்கள் நிம்மதியடைந்துள்ளனர். அந்த வகையில் புதிய உத்தரவுக்குப் பிறகு, போபால் நகரில் உள்ள சில பள்ளிகள், வகுப்புகளை திறக்கும் நேரத்தை அதிகரித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உற்சாகம் கொடுத்துள்ளது. இருப்பினும் பெரும்பாலான பள்ளிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஜூன் 13 முதல் மீண்டுமாக திறக்கப்பட உள்ளன. அந்த வகையில் போபால் அரேரா காலனியில் அமைந்துள்ள தனியார் பள்ளி நிர்வாகம், பள்ளிகள் திறக்கும் தேதியை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதாவது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் தேதியை ஜூன் 13ல் இருந்து ஜூன் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளுக்கு இன்னும் ஒரு வார காலம் அவகாசம் கிடைக்கும். இதே போல அந்நகரத்தில் உள்ள மற்ற தனியார் பள்ளிகளும் ஜூன் 13க்கு பதிலாக 20ம் தேதியன்று திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், குவாலியர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும் ஜூன் 30 வரை காலை 7 மணி முதல் மதியம் 12.30 மணி வரை காலை ஷிப்டில் இயக்கப்படும் என்று பொதுக்கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.