தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்வு எதிரொலி – ஏகப்பட்ட காலிப்பணியிடங்கள் உருவாக்கம்!

0
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்வு எதிரொலி - ஏகப்பட்ட காலிப்பணியிடங்கள் உருவாக்கம்!
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்வு எதிரொலி - ஏகப்பட்ட காலிப்பணியிடங்கள் உருவாக்கம்!
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்வு எதிரொலி – ஏகப்பட்ட காலிப்பணியிடங்கள் உருவாக்கம்!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்பட 7000 க்கும் மேற்பட்டோர் இந்த மாதத்தில் மட்டும் ஓய்வு பெற்றுள்ளனர். அதனால் இனி வரும் ஆண்டில் இளைஞர்களுக்கு அரசு பணிகள் கிடைக்க அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஊழியர்கள் ஓய்வு:

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 வயதாக இருந்தது. இந்த நிலையில் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக அரசுக்கு பெரும் பொருளாதார நெருக்கடி நிலை நிலவியது. இந்த சூழலில் ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 59 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து ஓய்வு பெறும் வயது 59 லிருந்து 60 ஆக உயர்த்தபட்டு அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகளும் வந்தது. ஏற்கனவே தமிழகத்தில் ஏராளமானோர் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து காத்துக்கிடக்கின்றனர். அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை அரசு உயர்த்தி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.

JioPhone பயனர்களுக்கு ஷாக் அளிக்கும் செய்தி – அதிரடி கட்டண உயர்வு!

இந்த நிலையில் கடந்த ஜூன் 1ம் தேதி நிலவரப்படி 60 வயதை பூர்த்தி அடைந்த சுமார் 7,000 அரசு ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்றனர். சென்னை தலைமை செயலகத்தில் மட்டும் 46 பேர் ஓய்வு பெற்றுள்ளதாக அரசு அலுவலர் ஒன்றியம் தகவல் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து இந்த வருடத்தில் மட்டும் சுமார் 25,000 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இனி வரும் ஆண்டில் அரசு துறைகளில் காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அரசுத்துறை காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது.

Exams Daily Mobile App Download

கடந்த 2 வருடங்களாக கொரோனா பாதிப்பால் ஏராளமான மக்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். மேலும் அரசுத்துறை காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகள் ஏதும் நடைபெறாததால் அரசு வேலை வாங்க வேண்டும் என்று கனவோடு இருந்தவர்கள் ஏமாற்றத்தை சந்தித்தனர். தற்போது வழக்கம் போல காலிப்பணியிங்கள் அறிவிக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் தற்போது ஓய்வு பெறும் ஊழியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் மேலும் காலிப்பணியிடங்கள் அதிகரிக்கும். இதனால் இளைஞர்கள் அரசு வேலை பெறும் சூழல் உருவாகும்என்பதால் பலர் நிம்மதி அடைந்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!