தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – விரைவில் கோடை விடுமுறை!

0
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - விரைவில் கோடை விடுமுறை!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - விரைவில் கோடை விடுமுறை!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – விரைவில் கோடை விடுமுறை!

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் மாணவர்களின் நலன் கருதி கோடை விடுமுறை விரைவில் அளிக்கப்பட வேண்டும். மேலும் கோடை விடுமுறை குறித்த தகவலை பள்ளிக் கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

கோடை விடுமுறை:

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில் கோடை காலம் முழுவதும் கோடை விடுமுறை அளிக்கப்படும். அதன் காரணமாக முன்னேற்பாடாக ஏப்ரல் மாதத்திற்குள் பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளிக்க ஏற்பாடு செய்யப்படும். இந்த ஆண்டு கொரோனா காரணமாக கடந்த செப்டம்பர் 1ம் தேதி அன்று தான் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வியாண்டு தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

அத்துடன் நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. கொரோனா பரவலின் 3ம் அலையின் காரணமாக ஜனவரி மாத முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் முழுவதும் மூடப்பட்டது. கொரோனா பரவல் குறைந்த பிறகு கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. அதன்படி இந்த ஆண்டு நேரடி வகுப்புகள் குறைவான நாட்களே நடைபெற்றுள்ளது. அதனால் ஏப்ரல் மாத இறுதி வரை வகுப்புகள் நடைபெற்றன. இதையடுத்து 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இதே போல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கிறது. அதனால் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்வதில் சிரமப்படுகின்றனர். அதனால் மாணவர்களின் நலன் கருதி கோடை விடுமுறை விரைவில் அளிக்கப்பட வேண்டும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பில் பள்ளிக் கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. அதனால் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி விரைவில் கோடை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!