1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கோடை விடுமுறை குறைப்பு!

0
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - கோடை விடுமுறை குறைப்பு!
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - கோடை விடுமுறை குறைப்பு!
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கோடை விடுமுறை குறைப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் பொதுத் தேர்வுக்கான தேதியும் பள்ளிக்கல்வித்துறை அண்மையில் வெளியிட்டது. இந்த நிலையில் அடுத்த கல்வியாண்டு விரைவில் தொடங்க இருப்பதால் இந்த ஆண்டுக்கான கோடை விடுமுறை நாட்கள் மிகவும் குறைவாகவே அளிக்கப்படுகிறது

கோடை விடுமுறை

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனால் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் கணக்கீட்டு முறை மூலம் மதிப்பெண் கணக்கிடப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து பொதுத்தேர்வு கட்டாயமான முறையில் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

அதன்படி பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை அண்மையில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. பொதுவாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வு நடத்தப்படும். இதையடுத்து மற்ற பொதுத்தேர்வு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும். இந்த ஆண்டு கொரோனா காரணமாக நேரடி வகுப்புகள் குறைவாக நடைபெற்றது. அதனால் தற்போது பொதுத்தேர்வு மே மாத இறுதி வரை நடைபெற உள்ளது. மேலும் கால அட்டவணையில் தெரிவித்துள்ளதாவது, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இதே போல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் 13 ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு கடைசி வேலை நாள் மே 12ம் தேதியுடன் முடிவடையும் என்றும் அனைத்து மாணவர்களுக்கும் அடுத்த கல்வியாண்டு ஜூன் மாதம் 13ம் தேதி முதல் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 24ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டுக்கான கோடை விடுமுறை குறைவான நாட்களே அளிக்கப்படுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!