தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மற்ற வகுப்புகளுக்கு தேர்வு கட்டாயம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்த பிறகு கடந்த 2021 செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது. 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டு. அரையாண்டு விடுமுறையும் அளிக்கப்பட்டது. இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வைரஸ் வேகமெடுக்க தொடங்கியது. அதனால் மாணவர்களின் நலன் கருதி ஜனவரி 31ம் தேதி வரை மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
SBI வங்கி ATM கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – வீட்டில் இருந்தபடியே பின் உருவாக்குவது எப்படி?
இந்த நேரத்தில் அரசின் முயற்சியால் கொரோனா பாதிப்புகள் குறைந்ததை அடுத்து மாணவர்களின் கல்வி நலனில் கவனம் செலுத்தும் நோக்கில் மீண்டும் 1 – 12 வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது. அதனால் நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டு தேர்வு கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. அதில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 6 ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்கும் என்றும் 30 ஆம் தேதி வரை தொடர்ந்து தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல மற்ற வகுப்புகளுக்கு பாட வாரியாக கால அட்டவணை வெளியாகியுள்ளது. இந்த நிலையில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான தொடக்க பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 6ஆம் வகுப்பு 9 ஆம் வகுப்புகளுக்கு மே மாதம் 5 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் என்றும் மே 30 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.