தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – குறையும் கோடை விடுமுறை!
தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் மே மாதம் வரை பள்ளிகள் செயல்படும் என்று சொல்லப்பட்ட நிலையில் அவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது அதில் சில மாற்றங்களை ஏற்படுத்தி விடுமுறை காலம் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோடை விடுமுறை:
தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் காரணமாக கடந்த 2 வருடமாக பல மாற்றங்கள் அமைந்ததில் பள்ளி, கல்லூரிகளும் ஒன்று. ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் நோய்த் தொற்று பரவலின் தாக்கம் குறைந்து வந்து 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது. இந்நிலையில் 10,11,12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையும் வெளியாகியிருந்தது.
அதில்,10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் மாதம் 5 முதல் மே மாதம் 2 வரை நடைபெறும் எனவும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 ல் தொடங்கி மே 30 வரையிலும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 ல் தொடங்கி மே 31 வரையிலும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 ல் தொடங்கி மே 28 ஆம் தேதி வரையிலும் பொதுத் தேர்வுகள் நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், தற்போது 6 முதல் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 முதல் 13 வரையிலும் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 13 ஆம் தேதி கடைசி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையில் கோடை விடுமுறையில் பள்ளிகள் செயல்படுவது தேவையற்றது என பல்வேறு தரப்பினர் கூறி வந்தனர். ஆனாலும் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வுகள் குறித்த தகவல்கள் மாற்று கருத்துக்கள் இருக்காது என திட்டவட்டமாக கூறியிருந்தார். இந்நிலையில் மே 13 முதல் ஜூன் 12 ஆம் தேதி வரை கோடை விடுமுறையாக தமிழக அரசு அறிவித்திருந்ததை அடுத்து 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஏப்ரல் 24 முதல் சிறப்பு வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு பள்ளி கோடை விடுமுறை காலம் வெகுவாக குறைந்துள்ளது.