சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மீண்டும் அணியில் இணையும் ரெய்னா? வலுக்கும் கோரிக்கை!
கடந்த 3 ஆட்டங்களில் அதிர்ச்சிகரமான தோல்வியை தழுவி இருக்கும் CSK அணியில் மீண்டும் சுரேஷ் ரெய்னாவை களமிறக்க வேண்டும் என கூறி ரசிகர்கள் சமூக ஊடகங்களில் ‘பிரிங் பேக் ரெய்னா’ என்ற பெயரில் மீம்களை வைரலாக்கி வருகின்றனர்.
சுரேஷ் ரெய்னா
இந்த ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளை தோல்வியில் ஆரம்பித்த நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்ய போராடிக் கொண்டிருக்கிறது. இந்த முறை MS தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகி இருக்கும் நிலையில் CSK அணியின் புதிய தலைமை பொறுப்பை ரவீந்திர ஜடேஜா கையகப்படுத்தி இருக்கிறார். இப்போது புதிய கேப்டனின் தலைமையில் விளையாடி வரும் CSK அணி கடந்த 3 ஆட்டங்களில் கடுமையான தோல்வியை தழுவி இருக்கிறது. இதில் 2வது ஆட்டத்தில் மட்டும் 200 ரன்களுக்கு மேல் எடுத்த CSK மற்ற ஆட்டங்களில் கடுமையான தோல்வியை சந்தித்து இருக்கிறது.
அண்ணா பல்கலை பொறியியல் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பாடத்திட்டம் மாற்றம்!
அந்த வகையில் நேற்று (ஏப்ரல்.3) நடைபெற்ற ஆட்டத்தில் கூட பஞ்சாப் கிங்ஸ் அணியின் லியாம் லிவிங்ஸ்டனின் அபாரமான ஆட்டத்தால் அந்த அணி 180 ரன்களை பெற்று CSK அணிக்கு 181 ரன்களை இலக்கு வைத்தது. இந்த இலக்கை சேஸ் செய்ய ஆரம்பித்த CSK அணி ஆரம்பத்திலேயே மிகுந்த தடுமாற்றத்தை சந்தித்தது. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் 1 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்தடுத்த ஓவர்களில், அதுவும் பவர் பிளேயில் மட்டும் 36 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தனர். ஆனால் முன்னாள் CSK கேப்டன் தோனி மற்றும் சிவம் துபேயின் ஆட்டத்தினால் ஓரளவுக்கு ஸ்கோர் பெற முடிந்தது.
இருந்தாலும் இப்போதைய புள்ளி பட்டியலில் CSK அணி தான் கடைசி இடத்தை வகித்துள்ளது. இந்த தொடர் தோல்வியினால் சற்று அதிர்ச்சியில் இருக்கும் CSK அணியில் மீண்டும் ரெய்னாவை களமிறக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சில மீம்களை பதிவிட்டு வருகின்றனர். அதாவது, CSK அணியில் ரெய்னா இருந்தபோது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதாகவும், இப்போது ரெய்னா இல்லாமல் லீக் ஆட்டங்களில் தொடர் தோல்வியை CSK தழுவிக் கொண்டிருப்பதாகவும் ஊடகங்களில் மீம்கள் உலா வருகிறது. மேலும், இந்த மீம்களுக்கு பின்னால் ‘பிரிங் பேக் ரெய்னா’ என்ற ஹேஷ்டேக்குகளையும் பதிவிட்டு வருகின்றனர்.