மே மாதத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை? மாநில அரசுக்கு பெற்றோர்கள் கோரிக்கை!
ஒடிசா மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள், தற்போதுள்ள கோடை வெயிலின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு கல்வி நிறுவனங்களுக்கு குறிப்பாக பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை முன்கூட்டியே வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளி விடுமுறை
இந்தியாவில், வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான கோடை விடுமுறை அளிக்கப்படுவது உண்டு. அந்த வகையில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் 2021-22ம் கல்வியாண்டு முடிவடைவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கிறது. ஆனால் இந்த முறை கொரோனா பேரலைத்தொற்று தாக்கத்தின் காரணமாக குறிப்பிட்ட சில மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் திட்டமிட்டபடி வேலை நாட்கள் செயல்படாததால், இந்த கல்வியாண்டுக்கான வேலை நாட்கள் நீட்டிக்கப்பட்டு விடுமுறை நாட்கள் குறைத்து அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு – மாவட்ட ஆட்சியர்களுக்கு முக்கிய உத்தரவு!
அந்த வகையில் ஒடிசா மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு இந்த ஆண்டுக்கான கோடை விடுமுறையை ஜூன் 6 முதல் 16 வரை 11 நாட்களாக குறைத்து அரசு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதே போல கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்கும் கோடை விடுமுறை நாட்கள் வெறும் 10 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அறிவிப்புகள் தற்போது பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கி இருக்கிறது.
அதாவது, ஒடிசா மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் தற்போது நிலவும் கோடை வெயிலின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு கல்வி நிறுவனங்களுக்கு குறிப்பாக பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை முன் கூட்டியே வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இப்போது விடுமுறை காலம் நீடிக்கும் என்றாலும் ஜூன் மாதத்துக்குப் பதிலாக மே மாதத்தில் விடுமுறை அளிக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கருதுகின்றனர். மேலும் இன்னும் ஓரிரு வாரங்களில் வெப்ப காலநிலை தீவிரமடையும் என்பதால், அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.