தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு – மாவட்ட ஆட்சியர்களுக்கு முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு பணிகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா பரவல்:
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மக்கள் மீண்டு வெளியே வரும் இந்த நேரத்தில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தாக்கத்தால் 3 கொரோனா அலைகள் பரவி பேராபத்தை ஏற்படுத்தியது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.
நாட்டில் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் மூடல்? அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! பொதுமக்கள் அச்சம்!
இந்த தடுப்பூசிகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்று பரவலில் இருந்து மக்களை பாதுகாத்தது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. ஏற்கனவே ஜூன் மாதத்தில் கொரோனா 4ம் அலை மக்களை தாக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ள நிலையில் தமிழகத்தில் அதற்கேற்றவாறு கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தற்போது 235 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி பாதிப்பு விகிதம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் கொரோனா வைரசை நாம் முற்றிலும் தடுக்க வேண்டுமானால் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும்.பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும். மருத்துவமனை வளாகங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.தமிழகத்தில் இன்னும் 40 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர். அவர்கள் விரைந்து தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.