தமிழகத்தில் ஏப்ரல் 30 முதல் ஜூன் 5 வரை கோடை விடுமுறை – பதிவாளர் அறிவிப்பு!
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் மாணவர்களின் நலன் கருதி கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. இதே போல் சென்னை ஐகோர்ட்டு மற்றும் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளைக்கும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை
தமிழகத்தில் கோடை காலம் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நிலவுகிறது. அத்துடன் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில் கோடை காலம் முழுவதும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு கொரோனா காரணமாக நேரடி வகுப்புகள் குறைவான நாட்களே நடைபெற்றுள்ளது.
சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
அதனால் ஏப்ரல் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. அதன் காரணமாக மாணவர்களுக்கு குறைந்த நாட்களே கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு மற்றும் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளைக்கும் கோடை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது, சென்னை ஐகோர்ட்டு மற்றும் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளைக்கு ஏப்ரல் 30ம் தேதி முதல் ஜூன் 5ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் விடுமுறை தினங்களில் பதிவாகும் வழக்குகளை விசாரிப்பதற்காக வாரத்துக்கு 4 நீதிபதிகள் வீதம் 20 பேர் விடுமுறை தினங்களில் பணியாற்றும் நீதிபதியாக இருக்க வேண்டும். இதில் சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் வாரத்துக்கு 3 நீதிபதிகள் வீதம் 15 நீதிபதிகள் விடுமுறை தினத்தில் பணிபுரிய வேண்டும் என்று பதிவுத்துறை அறிவித்துள்ளது. மே மாதத்தில் வாரந்தோறும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் மனுத்தாக்கல் செய்யவும் இந்த வழக்குகள் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் விசாரணைகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.