சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 376 எகிறியுள்ளது. இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து உக்ரைன் நாட்டில் நிலவி வந்த போரின் காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்த நிலையிலேயே இருந்து வருகிறது.
தங்கத்தின் விலை:
உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா தொற்று புரட்டி போட்டது. மேலும் பல வர்த்தகங்களும் செயலில் இல்லாமல் போனது. இதில் மிகவும் முக்கியமானதாக ஆபரண தங்கம். சாதாரண நாட்களில் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்காக நகை பிரியர்கள் நிறைய பேர் நகை வாங்கி மகிழ்வர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்கத்தின் விலை அதிகரித்தது. இதனால் நகை பிரியர்கள் தங்க நகைகளை வாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து தற்போது வரை உக்ரைன் நாடு போரில் சிக்கி தவித்து வருகிறது. அதனால் தற்போது வரை தங்கத்தின் விலை உயர்ந்த வண்ணமே உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத அகவிலைப்படி நிலுவைத்தொகை – முக்கிய அப்டேட்!
இந்நிலையில் வெளிநாடுகளில் தங்கம் மற்றும் மற்ற ஆபரணங்கள் ஒரு வகையான முதலீடு மட்டும் தான். ஆனால் இந்தியாவில் மட்டுமே இதை அணிகலனாக அணிந்து மகிழ்ந்து வருகின்றனர். முக்கியமாக தங்கத்தின் ஆர்வம் கொண்ட மாநிலத்தில் நமது மாநிலமான தமிழ்நாடு மட்டுமே தற்போது வரை முன்னிலையில் இருந்து வருகிறது. சமீப காலமாக ஆபரணத் தங்கத்தின் விலை மிகவும் எகிறி கொண்டே வருகிறது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் தங்கத்தின் விலை தற்போது மீண்டும் உயர ஆரம்பித்து விட்டது. இந்நிலையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.376 உயர்ந்து ரூ.39,176க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.47 உயர்ந்து ரூ.4,897க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.69.20க்கு விற்கப்படுகிறது என்றும் கூறியுள்ளனர். மேலும் இவ்வாறு தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நகைப்பிரியர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.