நாளை மறுநாள் (ஏப்.24) முதல் ஜூன் 14 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா பாதிப்பால் பாடங்களை முடிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் நடப்பு ஆண்டில் 10 முதல் 13 நாட்களுக்கு தான் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும் என அனைத்து மாநிலங்களிலும் அறிவிப்பு வெளியானது. இருப்பினும் தற்போது வெயிலின் தாக்கம் காரணமாக ஏப்ரல் 24 முதல் ஜூன் 14 வரை அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்படும் என சத்தீஸ்கர் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
கோடை விடுமுறை:
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாக தான் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெப்ப பள்ளி நேரத்தை குறைக்க வேண்டும் என்றும் குறைந்தது சனிக்கிழமைகளில் பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பள்ளிக் கல்வித் துறைக்கு வந்துள்ளது. இந்நிலையில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை முன்கூட்டியே வழங்க சத்தீஸ்கர் மாநில அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஏப்ரல் 24 முதல் ஜூன் 14 வரை கோடை விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை வியாழக்கிழமை அறிவித்தது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ரத்து? அமைச்சரின் முக்கிய விளக்கம்!
இது குறித்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு செய்தி குறிப்பில், அனைத்து பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறைகள் ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் ஜூன் 14 வரை அளிக்கப்படுகிறது. கோடை வெயில் 42 டிகிரி செல்சியஸுக்கு மேல் அதிகரித்துள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு, புதிய கல்வி ஆண்டு ஜூன் 15ம் தேதி தொடங்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கிடையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் இறுதி வரி மதிப்பீடு ஏப்ரல் 25 அன்று திட்டமிடப்பட்ட பள்ளிகளில், தானாக முன்வந்து மதிப்பீட்டில் சேர விரும்பும் மாணவர்கள் அவ்வாறு செய்யலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ExamsDaily Mobile App Download
இப்போது, அறிவிக்கப்பட்ட இந்த கோடை விடுமுறைகள் ஆசிரியர்களுக்கும் கிடைக்கும் என்றும் பயிற்சி மற்றும் நிர்வாகப் பணிகள் வழக்கம் போல தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சத்தீஸ்கரில் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸுக்கு மேல் சென்றுள்ளது. ராய்ப்பூர் , துர்க் , பிலாஸ்பூர் மற்றும் சுர்குஜா பிரிவுகளின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான வெப்ப நிலை நிலவுகிறது . கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டதால் மே 14 வரை இந்த கல்வியாண்டு தொடரும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், கோடை வெப்பம் நாள்தோறும் அதிகமாக இருப்பதால், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு ஏப்ரல் 24 முதலே விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.