தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ரத்து? அமைச்சரின் முக்கிய விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதையடுத்து இப்போது மாணவர்களுக்கான கோடை விடுமுறை குறித்த முக்கிய தகவல்களை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
கோடை விடுமுறை
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்து வருவதால் கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நேரடி வகுப்புகள் வழக்கம் போல நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு கட்டாயமான முறையில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அதன்படி 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை அண்மையில் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
ExamsDaily Mobile App Download
அத்துடன் இந்த ஆண்டு குறைவான நாட்களே நேரடி வகுப்புகள் நடைபெற்றுள்ளது. அதனால் பொதுத்தேர்வுக்கான பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த குறைக்கப்பட்ட பாடத்திட்டம் குறித்த விவரங்கள் கடந்த செப்டம்பர் மாதம் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பாடத்திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் அமைக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உறுதி அளித்துள்ளது. இந்த நிலையில் பொதுத்தேர்வுக்கான பாடங்கள் நடத்தி முடிக்காமல் உள்ளது.
SBI வங்கியில் உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பு – 48 காலிப்பணியிடங்கள்..!
மேலும் இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, பொதுத்தேர்வின் பாடத்திட்டத்தில் நடத்தி முடிக்கப்படாமல் உள்ள பாடங்களை விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி ஆணையர் மூலமாக ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் குறைக்கப்பட்ட பாடங்கள் போக மீதமுள்ள பாடங்களையும் நடத்த வேண்டும். அதனால் இந்த ஆண்டுக்கான கோடை விடுமுறை நாட்கள் குறைவாகவே இருக்கும் என்றும் அடுத்த ஆண்டு வழக்கமாக ஒன்றரை மாதங்கள் விடுமுறை அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். அதன்படி மே மாதத்தில் 10 முதல் 13 நாட்கள் மட்டுமே கோடை விடுமுறை அளிக்கப்படும்.