தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு மே 13 முதல் கோடை விடுமுறை? பள்ளிகள் திறப்பு தேதி வெளியீடு!
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வுக்கான தேதிகளை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி இதில் மாணவர்களுக்கு வழக்கம் போல் வழங்கப்படும் கோடை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பள்ளி திறப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியதால் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் ஜனவரி 31ம் தேதி வரை மூடப்பட்டன. அத்துடன் தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. அதன்படி தற்போது கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் வழக்கம் போல் செயல்பட தொடங்கியுள்ளன. மேலும் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கட்டாயமான முறையில் இந்த ஆண்டு நேரடி முறையில் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மார்ச் 18ம் தேதி பட்ஜெட் தாக்கல்? மார்ச் 5இல் கூடும் அமைச்சரவை! ஏற்பாடுகள் தீவிரம்!
மேலும் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வை எதிர்கொள்ளும் வகையில் முதல் திருப்புதல் மற்றும் 2ம் திருப்புதல் தேர்வுகளை நடத்த முடிவு செய்தது. அதன்படி முதல் திருப்புதல் தேர்வு கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்றது. இத்தேர்வு அனைத்து பள்ளிகளிலும் பொது தேர்வு போல நடத்தப்பட்டது. அத்துடன் 2ம் திருப்புதல் தேர்வும் பொது தேர்வு போல நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே தவணையில் 18 மாத DA நிலுவைத்தொகை? முழு விவரம் இதோ!
இதில் தெரிவித்தாவது, 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை பொது தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாணவர்களுக்கு மே 13ம் தேதி தான் இறுதி வேலை நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 11ம் வகுப்பு மாணவர்கள் தவிர மற்ற அனைத்து வகுப்பினருக்கும் ஜூன் மாதம் 13ம் தேதி அன்று 2022-23ம் ஆண்டிற்கான கல்வியாண்டு தொடங்கப்படும் என்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 24ம் தேதி தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அதனால் வழக்கமாக மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும் நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக மாணவர்கள் மிகுந்த வருத்தத்துடன் இருக்கிறார்கள்.