“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மாற்றப்பட்ட முல்லை கதாபாத்திரம் – ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குடும்ப சீரியலான “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் புது முல்லையாக நடிகை ஒருவர் களமிறங்க இருக்கிறார். அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தமிழ் சின்னத்திரையில் இதுவரை ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மாறுப்பட்ட கதையுடன் ஒளிபரப்பாகி வருகிறது. மாமியார் சண்டை, பழி வாங்கும் செயல் என வழக்கமாக இருக்கும் சீரியல்கள் போல இல்லாமல், இந்த சீரியல் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தின் கஷ்டங்களை பற்றியே இருக்கிறது. இந்த சீரியலில் அண்ணன் தம்பிகள் நான்கு பேரும் சேர்ந்து ஒரு கடையை நடத்த அவர்களின் மனைவிகளும் புகுந்த வீட்டை தன் வீடு போல பார்ப்பது சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணம்.
மேலும் குடும்பம் பாசம் என ஒரு பக்கம் இருந்தாலும் கணவன் மனைவி எப்படி ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு அன்புடன் வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் கதிர் முல்லை ஜோடி இருக்கின்றனர். முதலில் பிடிக்காமல் திருமணம் செய்து கொண்ட இருவரும் திருமணத்திற்கு பின் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு காதலில் விழுகின்றனர். மேலும் தற்போது அவர்களுக்கு குழந்தை வேண்டும் என்ற கனவுடன் இருக்க ஆனால் அதில் பெரிய சிக்கல் வர போகிறது.
இந்நிலையில் கதிர் கதாபாத்திரத்தில் நடிகர் குமரன் நடித்து வருகிறார். முல்லையாக நடிகை காவ்யா அறிவுமணி நடித்து வருகிறார். தன்னுடைய எதார்த்தமான நடிப்பை இருவரும் வெளிப்படுத்தி வரும் நிலையில், காவ்யா சீரியலில் இருந்து விலக இருப்பதாக சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. இந்நிலையில் விஜய் டிவியின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் நாயகி தேஜஸ்வினி சீரியலில் முல்லையாக வருவது போல ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அது எடிட் செய்யப்பட்ட ப்ரோமோவாக இருந்தாலும் அவர் முல்லை கதாபாத்திரத்தில் கட்சிதமாக பொருந்தி இருக்கிறார்.