தமிழகத்தில் மார்ச் 18ம் தேதி பட்ஜெட் தாக்கல்? மார்ச் 5இல் கூடும் அமைச்சரவை! ஏற்பாடுகள் தீவிரம்!
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று குறைந்த நிலையில் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதனை தொடர்ந்து வருகிற 5ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
சட்டசபை கூட்டம்
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி பொதுமக்கள் தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் தமிழக சட்டசபை கூட்டம் கடந்த ஜனவரி 5ம் தேதி அன்று நடைபெற்றது. இந்த கூட்டம் கவர்னர் ஆர்.என்.ரவி அவர்களின் உரையுடன் தொடங்கியது. அத்துடன் இதில் 15 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து சட்டசபை கூட்டம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 8ம் தேதி அன்று சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் ஜூன் 13 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு – புதிய கல்வியாண்டு குறித்த முக்கிய அறிவிப்பு!
இந்த கூட்டத்தில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற மசோதா மீண்டும் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மேலும் வர்த்தக அமைப்பினர், வணிகர் சங்கத்தினர் உள்ளிட்டவர்களிடம் இருந்து பல்வேறு கருத்துகளை கேட்டும் அதன்படி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான அறிக்கையை தயார் செய்து வருகிறார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே தவணையில் 18 மாத DA நிலுவைத்தொகை? முழு விவரம் இதோ!
இதனை தொடர்ந்து பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் விரைவாக முடிய வாய்ப்பு உள்ளது. அதனால் வருகிற 18ம் தேதி அன்று சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் வேளாண் பட்ஜெட் தாக்கல் வருகிற 19ம் தேதி அன்று தாக்கல் செய்யலாம். இதற்கான தீவிர நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனால் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் தமிழக அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டு பட்ஜெட்டில் இடம்பெற உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து விவாதம் மேற்கொள்ளப்படும். அதன்பின்பு தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதன்படி தமிழக அமைச்சரவை கூட்டம் மார்ச் 5ம் தேதி அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது