மாநிலத்தில் மே 2 முதல் கோடை விடுமுறை – ஜூன் 13 பள்ளிகள் திறப்பு! மகிழ்ச்சியில் மாணவர்கள்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து தற்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல செயல்பட தொடங்கியுள்ளன. இதையடுத்து இந்த ஆண்டுக்கான கோடை விடுமுறை குறித்தும் அத்துடன் அடுத்த கல்வியாண்டுக்கான வேலை நாள் தொடங்குவது குறித்தும் மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் கவனத்திற்கு
இந்தியாவில் தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் வைரஸ் தொற்றின் காரணமாக கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் தொடங்கியது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அத்துடன் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இப்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாத இறுதி முதல் அனைத்து கட்டுப்பாடுகளையும் திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ExamsDaily Mobile App Download
இதனை தொடர்ந்து தற்போது இந்தியாவில் அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. அத்துடன் அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்பட தொடங்கியுள்ளன. அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்திலும் தற்போது கொரோனா பரவல் குறைந்து உள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதையடுத்து தற்போது பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை பற்றியும் அத்துடன் அடுத்த கல்வியாண்டு தொடங்குவது குறித்த அறிவிப்பையும் மகாராஷ்டிரா அரசு வெளியிட்டுள்ளது.
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – தேர்வர்கள் கவனத்திற்கு!
இந்த அறிவிப்பில் கூறியதாவது, கொரோனா காரணமாக நேரடி வகுப்புகள் குறைவாக நடைபெற்றதால் இந்த ஆண்டு 1 முதல் 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற ஏப்ரல் 30ம் தேதி வரை வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மே 2ம் தேதி முதல் ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்படும் என்றும் இதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் விதர்பா பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஜூன் 27ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 30ம் தேதி அன்று வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.