TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – தேர்வர்கள் கவனத்திற்கு!
கூட்டுறவு தணிக்கை துறையில் உதவி இயக்குனர் துறைக்கான எழுத்துத் தேர்வு ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த பணிக்கு விண்ணப்பித்தவர்கள் TNPSC இன் அதிகாரபூர்வமான இணையதள முகவரிக்கு சென்று ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹால்டிக்கெட் பதிவிறக்கம்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை தகுதித் தேர்வின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுத்து நிரப்பி வருகின்றன. அதாவது டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 முதலான தகுதித் தேர்வுகளை நடத்தி தகுதியான தேர்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக தகுதித் தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை.
ExamsDaily Mobile App Download
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள காரணத்தினால் இந்த ஆண்டு தகுதி குரூப் 2, குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. குரூப் 2 தேர்வு மே 21 ஆம் தேதியும், குரூப் 4 தகுதி தேர்வு ஜூன் 24 ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தகுதித்தேர்வு நடக்க இருக்கும் காரணத்தினால் பல லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கூட்டுறவு தணிக்கை துறையில் உதவி இயக்குனர் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் மே 16ம் தேதி முதல் திறப்பு – அரசு அதிரடி அறிவிப்பு!
கூட்டுறவு தணிக்கை துறையில் உதவி இயக்குனர் துறைக்கு மொத்தமாக 8 காலியிடங்கள் உள்ளன. கூட்டுறவு தணிக்கை துறையில் உதவி இயக்குனர் பணிக்கான எழுத்து தேர்வு ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. எனவே விண்ணப்பித்திருக்கும் விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய இணையதள முகவரிக்கு சென்று ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.