திடீரென கோபமான ஆலியா மானசா – காரணம் என்ன தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
பயில்வான் ரங்கநாதன் சினிமா திரையில் உள்ளவர்களை மிகவும் இழிவுபடுத்தி அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். ஆலியா மானசா பயில்வான் ரங்கநாதன் குறித்து தற்போது ஒரு பேட்டியில் கூறும்படியான வீடியோ வைரலாகி வருகிறது.
பயில்வான் ரங்கநாதன்:
பயில்வான் ரங்கநாதன் அவ்வப்போது திரையுலக பிரபலங்கள் பற்றி இழிவாக பேசி சர்ச்சையில் மாட்டிக் கொள்கிறார். இவரின் வீடியோக்கள் அனைத்துமே சர்ச்சையை ஏற்படுத்தினாலும் தொடர்ந்து பல திரைப்பிரபலங்களுடன் சேர்த்து வைத்து இழிவாக தான் பேசி வீடியோக்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார். சின்னத்திரை பிரபலமான ஆலியா மானசா சென்னை மற்றும் கோயம்புத்தூர் போன்ற மாநகரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பல் மருத்துவமனையின் துவக்க விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
Exams Daily Mobile App Download
துவக்க விழாவின் போது ஆலியா மானசாவிடம் பயில்வான் ரங்கநாதன் அவ்வப்போது இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்கி கொள்கிறாரே இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என கேட்கிறார்கள். அதற்கு ஆலியா மானசா அவர் செய்து கொண்டிருப்பது முற்றிலும் தவறானது. சினிமாவில் இருப்பதால் மட்டுமே அவர்களைப் பற்றிய விஷயம் வெளியே பரவி வருகிறது. அனைவருக்குமே நண்பர்கள், காதலர்கள் என அனைத்து உறவும் இருக்கத்தான் செய்கிறது.
சன் டிவி ‘கண்ணான கண்ணே’ சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை – ரசிகர்கள் ஹாப்பி!
சினிமா துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமே இதுபோன்ற தவறான உறவு, நண்பர்கள் போன்ற அனைத்தும் இருக்கிறது என சித்தரிப்பது முற்றிலும் தவறானது என பேட்டி கொடுத்துள்ளார். மேலும் மக்கள் அனைவரும் சினிமாவில் நடிப்பவர்களும் மனிதர்கள்தான் நம்மைப் போன்ற உணர்ச்சிகள் அவர்களுக்கும் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். சினிமாவில் உள்ளவர்களை வேறு யாருடனோ தொடர்பு படுத்தி பேசுவதற்கு முன்பாக தங்களது குடும்பத்தில் உள்ளவர்களையும் நினைத்துப் பார்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். ஆலியா மானசா இந்த பேட்டியின் மூலமாக சினிமாத்துறையில் உள்ளவர்களை பற்றி இழிவாக பேசுபவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.