தமிழகத்தில் ‘டிரைவிங் லைசென்ஸ்’ நடைமுறையில் திடீர் மாற்றம் – குழப்பத்தில் பொதுமக்கள்!
தமிழகத்தில் போக்குவரத்து துறை, ஆர்.டி.ஓ., அலுவலக விண்ணப்ப நடைமுறையில் புதிய மாற்றம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
‘டிரைவிங் லைசென்ஸ்’ நடைமுறை:
திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்கள் சார்பாக டிரைவிங் லைெசன்ஸ் வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் குறித்து பல்வேறு புகார்கள் வட்டார போக்குவரத்து துறை அலுவலகங்களுக்கு வந்ததை தொடர்ந்து, போக்குவரத்து துறை கமிஷனர் தரப்பில் இருந்து கடந்த செப்டம்பரில் இது குறித்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
தீபாவளிக்கு ரொக்க பரிசு – அரசின் ஜாக்பாட் அறிவிப்பு! மகிழ்ச்சியில் மக்கள்!
Exams Daily Mobile App Download
அதாவது, பொதுமக்கள் மூலம் இருந்து பெறப்படும் நேரடி விண்ணப்பங்களுக்கு லைசென்ஸ் தாமதமாகவும், ஓட்டுநர் பயிற்சி பள்ளி மூலம் வரும் விண்ணப்பங்களுக்கு லைசென்ஸ் வேகமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அரசு, வாரத்தின் திங்கள், வியாழன், வெள்ளி மூன்று நாட்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் ஆன்லைன் விண்ணப்பங்களுக்கு தேர்வு நடத்த வேண்டும் என்றும் செவ்வாய், புதன் ஆகிய இரு நாட்கள் ஓட்டுநர் பயிற்சி பள்ளி மூலம் வரும் விண்ணப்பங்களுக்கு தேர்வு நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
தற்போது ஓரு மாதம் செயலில் இருந்த இந்த நடைமுறை திடீரென மாற்றப்பட்டு, திங்கள், வெள்ளி இரு தினங்கள் மட்டும் பொதுமக்களிடம் இருந்து நேரடி விண்ணப்பம் பெற்று தேர்வு நடத்த வேண்டும். செவ்வாய், புதன், வியாழன் மூன்று நாட்கள் ஓட்டுநர் பயிற்சி பள்ளி விண்ணப்பங்களுக்கு தேர்வு நடத்த வேண்டும் என அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் மாற்றம் பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த மாற்றம் குறித்து அரசு தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிட தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்