தீபாவளிக்கு ரொக்க பரிசு – அரசின் ஜாக்பாட் அறிவிப்பு! மகிழ்ச்சியில் மக்கள்!
நாடு முழுவதும் வரும் அக். 24ம் தேதி (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு புதுவை அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரொக்க பரிசு:
இந்தியாவில் ரேஷன் கடைகள் வாயிலாக மக்கள் மளிகை பொருட்களை மலிவு விலையில் பெற்று வருகின்றனர். அது மட்டுமல்ல மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல நலத்திட்ட உதவிகளும் தற்போது ரேஷன் கடைகள் வாயிலாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த வருடங்களில் பரவிய கொரோனா பேரிடர் காலத்தில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு இலவச அரசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில் மாநில அரசுகள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசுத்தொகுப்புகளை அறிவித்து வருகிறது.
தமிழகத்தின் இந்த 4 மாவட்ட மக்களே ஜாக்கிரதை.. நெருங்கும் பாதிப்பு – பொதுப்பணித்துறை எச்சரிக்கை!
Exams Daily Mobile App Download
அந்த வகையில் அண்மையில் மகாராஷ்டிரா மாநில அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ ரவை, நிலக்கடலை, சமையல் எண்ணெய், துவரம் பருப்பு ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பை வழங்கப்படும் என்று அறிவித்தது. அதனை தொடர்ந்து புதுச்சேரி அரசு 25 வகை மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை மானிய விலையில் வழங்க முடிவு செய்துள்ளது. இத்திட்டத்திற்காக மொத்தம் 83,000 தொகுப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக புதுவை முதல்வர் தெரிவித்துள்ளார்.
Follow our Instagram for more Latest Updates
அதனை தொடர்ந்து புதுச்சேரியில் இந்த வருடம் தீபாவளியை முன்னிட்டு 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரைக்கான பணம் குடும்பத் தலைவரின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு புதுச்சேரி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பேசிய முதல்வர் மக்கள் குறைகளை கேட்டு அதை தீர்ப்பதே அரசின் எண்ணம் என்றும் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்