தமிழகத்தின் இந்த 4 மாவட்ட மக்களே ஜாக்கிரதை.. நெருங்கும் பாதிப்பு – பொதுப்பணித்துறை எச்சரிக்கை!

0
தமிழகத்தின் இந்த 4 மாவட்ட மக்களே ஜாக்கிரதை.. நெருங்கும் பாதிப்பு - பொதுப்பணித்துறை எச்சரிக்கை!
தமிழகத்தின் இந்த 4 மாவட்ட மக்களே ஜாக்கிரதை.. நெருங்கும் பாதிப்பு - பொதுப்பணித்துறை எச்சரிக்கை!
தமிழகத்தின் இந்த 4 மாவட்ட மக்களே ஜாக்கிரதை.. நெருங்கும் பாதிப்பு – பொதுப்பணித்துறை எச்சரிக்கை!

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த ஒரு மாதமாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தேனி மாவட்டம் வைகை அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதனால் மக்களின் நலன் கருதி முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை:

தமிழகத்தில் கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்தது. இந்த வருடம் கோடை காலத்திலும் கனமழை கொட்டித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது. அதனால் மக்கள் கோடை வெயிலில் இருந்து தப்பித்து சற்று நிம்மதி அடைந்தனர். இந்த தென்மேற்கு பருவ மழை கோடை காலத்தில் குளிர்ச்சியான சூழலை அளித்தது. அதனை தொடர்ந்து கடந்த 1 மாதமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

எச்சரிக்கை.. மக்களை மோசமாக பாதிக்கும் கண் நோய்.. மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

நேற்று மதுரை, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, அரியலூர்‌, தென்காசி,, திருப்பத்தூர்‌, தருமபுரி, கள்ளக்குறிச்‌சி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அக். 20ம் தேதி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த தொடர் மழையால் நீர் நிலைகள் நிரம்பியுள்ளது. முக்கிய அணைகளின் நீர் வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டி வருகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அந்த வகையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. கேரள மாநிலத்தில் பெய்து வரும் மழையால் பெரியாறு அணை நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வைகை அணை நீர்மட்டம் மீண்டும் படிப்படியாக உயர்ந்து உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வைகை ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, கடக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்று பொதுப்பணித் துறை அறிவுறுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!