மார்ச் 28,29 ஆகிய இரு நாட்களில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் – முக்கிய சேவைகள் பாதிப்பு!
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29 நாட்களில் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய போராட்டம் நடத்த உள்ளனர். அத்துடன் பல்வேறு துறைகளும் இதில் கலந்து கொள்ள உள்ளனர். அதனால் இந்த இரு நாட்களிலும் முக்கிய சேவைகள் பெறுவதில் பாதிப்பு ஏற்படும்.
வேலை நிறுத்தம்
அரசு பொதுத்துறை நிறுவனங்களில் தனியார்மயமாக்க வேண்டும் என்று மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அத்துடன் அரசின் நிறுவனங்களில் தனியார் முதலீட்டை கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுவது உள்ளிட்ட பலவற்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதற்கு எதிராக பல்வேறு தரப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – புதிய பொருள் விநியோகம்!
மேலும் தனியார்மயமாக்கல் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கடந்த ஆண்டு மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட 25 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒன்றிணைந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆண்டும் இதே போல் வேலை நிறுத்த போராட்டத்தை அரசு ஊழியர்கள் நடத்த உள்ளனர். வருகிற மார்ச் 28,29 ஆம் தேதி அதாவது நாளையும் நாளை மறுநாளும் என இரு நாட்களில் வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளனர்.
இதில் கடந்த ஆண்டை விட ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அத்துடன் வங்கி ஊழியர்கள் தவிர்த்து வருமான வரித்துறை, காப்பீடு துறை, நிலக்கரி, எண்ணெய், தொலைத்தொடர்பு, தபால் நிலையம் உள்ளிட்ட பல்வேறு துறை ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். அதனால் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரு நாட்களிலும் வங்கி சேவைகள் உட்பட பல்வேறு முக்கிய சேவைகளும் பாதிக்கப்படுகிறது.