தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் ஆர்ப்பாட்டம்!
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்துதல், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் கடந்த சில நாட்களாக வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டம் அமல்:
தமிழகத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும். தமிழகத்தில் 50 ஆண்டுகளாக ஆசிரியர்களுக்கு வழங்கி வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட ஆசிரியர் பொதுமாறுதல் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இது கட்டாயம்! முழு விவரம் இதோ!
தமிழக சட்டமன்ற தேர்தலின்போது, பழைய ஓய்வூதிய திட்டமே மீண்டும் கொண்டு வரப்படும் என தி.மு.க வாக்குறுதி கொடுத்தது. அதை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநாட்டிலும் முதலமைச்சர் உறுதிப்படுத்தினார். ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன்னதாக, மூன்று ஆண்டுகளாக ஜாக்டோ ஜியோ நடத்திய பல்வேறு போராட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் பங்கேற்று கழக அரசு வந்தால் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் எனக் கூறி அரசு ஊழியர்களின் போராட்டங்களையும் வாழ்த்திப் பேசினார். இருப்பினும் தற்போது திமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகிய இந்த நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதற்கு அதிக செலவாகும் என மாநில நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கொரடாச்சேரி வட்டார கிளை சார்பில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்கள் ஆகியோருக்கு பாராட்டு விழா திருவாரூரில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு வட்டார தலைவர் ஜெயந்தி தலைமை தாங்கினார். மேலும் முக்கிய நபர்கள் கலந்து கொண்டு பேசினர். அப்போது பேசிய மாநில பொதுச்செயலாளர் ரெங்கராஜன் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும்.
Exams Daily Mobile App Download
தமிழகத்தில் பணிபுரியக்கூடிய இடைநிலை ஆசிரியர்களுக்குள்ளேயே ஊதிய முரண்பாடு உள்ளது. அதனை நீக்கும் வகையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ-ஜாக் அமைப்பின் மூலம் ஆசிரியர்களை ஒன்றிணைத்து கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தது. இருப்பினும் அமைச்சர் கேட்டுக்கொண்டதற்கிணங்க தற்காலிகமாக அந்த போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பழைய ஓய்வூதியம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தொடர்ந்து போராடுவோம் என கூறினார்.