வங்கிக்கு செல்ல திட்டமிட்டோர் கவனத்திற்கு – வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு! அரசின் முடிவு என்ன?
மத்திய அரசு கடந்த 2004ம் ஆண்டு முதல் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதற்க்கு அரசு ஊழியர்கள் ஆரம்ப காலத்தில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அத்துடன் இதனை கண்டித்து பொதுத்துறை வங்கி ஊழியர்கள் ஜூன் 27ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
போராட்டம்:
இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அத்துடன் இது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் பல்வேறு இடங்களில் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கடந்த 2004ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
TNPSC குரூப் 2 & 2A தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – ஜூன் மாத இறுதியில் ரிசல்ட்? ஆணையம் விளக்கம்!
இதற்கு ஆரம்ப காலத்தில் இருந்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக வருகிற ஜூன் 27ம் தேதி அன்று பொதுத்துறை வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளன. மேலும் வங்கி ஊழியர்கள் சங்கம் புதிய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக தெரிவித்தாவது, பொதுத்துறை ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தபோது ஊழியர்களின் சம்பளம் எவ்வித பிடித்தமுமின்றி முழுவதுமாக கிடைத்தது. ஆனால் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் சம்பளத்தில் 10% பிடித்தம் செய்யப்படுகிறது. அத்துடன் 14% பங்கு அரசால் எடுத்து கொள்ளப்படுகிறது.
Exams Daily Mobile App Download
மேலும் புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூதியத்தின் ஒரு பகுதி பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதனால் இதில் நஷ்டமும் ஏற்படக்கூடும். அத்துடன் இதில் ஜிபிஎஃப் வசதி இல்லை என்பதால் ஓய்வூதியத்தொகை நிலையாக கிடைப்பதில் சிக்கல் உள்ளது. அத்துடன் மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கும் திட்டத்தால் பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படும் என்பதால் பொதுத்துறை ஊழியர்கள் இதனை கண்டித்து ஜூன் 27ம் தேதி அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.