இந்தியாவில் ஓமைக்ரான் பரவலை தடுக்க தீவிர கட்டுப்பாடுகள் – மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்!
இந்தியாவில் ஓமைக்ரான் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இத்தொற்றை தடுக்க அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் வகையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பிரதமரின் அவசர ஆலோசனை:
உலகில் மொத்தம் 90 நாடுகளில் கொரோனாவின் புது உருவமான ஓமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது. இந்தியாவில் நேற்று மட்டும் 80 பேருக்கு ஓமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை நாடு முழுவதும் 300 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸை விட ஓமைக்ரான் தொற்று மிக வேகமாக பரவும் ஆற்றல் உடையது. இத்தகைய மோசமான ஓமைக்ரான் தொற்றை தடுக்க நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழக அரசு பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துனருக்கு கூடுதல் அதிகாரம் – பெண் பயணிகள் பாதுகாப்பு!
இதில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் படி பிரதமர் அறிவுறுத்தினார். அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் இலக்கை 100% சதவீதம் அடைய வேண்டும் என்றும் படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர் வசதிகளை தயார் நிலையில் வைக்கும்படியும் கேட்டுக்கொண்டார். முன்னெச்சரிக்கையாக ஓமைக்ரான் தொற்றை தடுக்கும் அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டார். மேலும், பண்டிகை கால கட்டுப்பாடுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொங்கல் தொகுப்பு புகார் தெரிவிக்க வசதி!
நேற்று நடந்த அவசர ஆலோசனை கூட்டம் மாலை 7 மணி முதல் தொடங்கி இரவு 9.30 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது. இதில் எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்கள், ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர், ஒன்றிய அரசு உயர் அதிகாரிகள், நிதி ஆயோக் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு ஓமைக்ரான் பரவலை தடுக்க ஆலோசனை கூறினர். இந்தியாவில் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் அதிகமாக சோதனையை தீவிரப்படுத்த வேண்டும். மேலும் இரவு நேர ஊரடங்கை பிறப்பிக்கலாம் என்றும் பிரதமர் அறிவுறுத்தி உள்ளார்.