தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொங்கல் தொகுப்பு புகார் தெரிவிக்க வசதி!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பொங்கல் தொகுப்பு புகார் தெரிவிக்க வசதி!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பொங்கல் தொகுப்பு புகார் தெரிவிக்க வசதி!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொங்கல் தொகுப்பு புகார் தெரிவிக்க வசதி!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்குவதில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு அறை:

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த பொங்கல் தொகுப்பில் பொங்கல் வைக்க தேவையான பச்சரிசி, முந்திரி, திராட்சை, வெல்லம் மற்றும் ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும், சில மளிகை பொருட்கள் மற்றும் முழு கரும்பு என 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த பொங்கல் தொகுப்பானது தமிழகத்தில் 2 கோடியே 60 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர்வாழ் முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ரூ.1088 கோடி செலவில் வழங்கப்பட உள்ளது.

தினசரி இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல் – முதல்வர் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகை இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த பொங்கல் தொகுப்பானது விரைவில் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ள நாட்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு எந்த பொருளும் விடுபடாத வகையில் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பொருட்கள் இல்லை என்று மக்களை திருப்பி அனுப்பி அலைகளிக்கும் விதமாக நடந்து கொள்ள கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஓமைக்ரான் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்? முதல்வர் ஆலோசனை!

அதனை தொடர்ந்து பொங்கல் தொகுப்பு வழங்கும் நாட்களில் உரிய நேரத்தில் கடையை திறந்து வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு விபரங்கள் அறிக்கையாக பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். பொங்கல் தொகுப்பு வழங்குவது தொடர்பான புகார் தெரிவிக்க துணைப்பதிவாளர் நிலையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு தொடர்பு எண்கள் வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்பு வழங்கப்படுவது குறித்து எழும் புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!