தமிழக மக்களுக்கு வியாபாரிகள் முன்வைத்த கோரிக்கை – நெருங்கும் பண்டிகை காலங்கள்!
ஆன்லைன் வர்த்தகம் அசுர வளர்ச்சி அடைந்து வருவதால் பெட்டிக்கடைகள் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் பெரும் நஷ்டம் அடைந்து வருகின்றனர். எனவே சில்லறை வணிகம் செய்பவர்களை ஆதரிக்குமாறு வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
வியாபாரிகள் சங்கம்:
தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் மக்கள் தங்களுக்கு தேவையானவற்றை ஆன்லைன் மூலம் பெற்று வருகின்றனர். சிறிய பொருட்கள் முதல் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வரை அனைத்தும் ஆன்லைன் மூலம் பெற்று வருகின்றனர். இதனால் சந்தை வியாபாரிகள் பெரும் நஷ்டம் அடைந்து வருகின்றனர். தற்போது பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில் ஆன்லைனில் வழங்கப்படும் சிறப்பு சலுகைகளுக்கு வாடிக்கையாளர்கள் மாறி வருகின்றனர்.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – முன்னேற்பாடு பணிகளை தொடங்க உத்தரவு!
எனவே சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஆன்லைன் வர்த்தகத்தை தவிர்க்க வலியுறுத்தி தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் பொதுமக்களுக்கு மற்றும் கடைக்காரர்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அது குறித்து பேரவையின் ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, சிறு வணிகத்தையும் சில்லறை வணிகத்தையும் சிதைக்கும் நோக்கோடு ஆன்லைன் வர்த்தக சங்கம் செயல்பட்டு வருகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு காவல்துறையில் புதிய பதவிகள் உருவாக்கம் – உள்துறை செயலாளர் உத்தரவு!
மேலும் வியாபாரிகள் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக செயல்படுவது நல்லது அல்ல என சுட்டிக்காட்டிய அவர் வரும் நாட்கள் பண்டிகைக் காலம் என்பதால் பொதுமக்கள் ஆன்லைன் வர்த்தகத்தை தவிர்த்து உள்ளூர் வியாபாரிகளிடம் பொருட்களை வாங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். பொதுமக்கள் தொடர்ச்சியாக ஆன்லைன் வர்த்தகத்திற்கு ஆதரவளித்தால் சில்லறை வணிகம் அழிந்து போகக் கூடிய ஒரு சூழல் ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.