தமிழ்நாடு காவல்துறையில் புதிய பதவிகள் உருவாக்கம் – உள்துறை செயலாளர் உத்தரவு!
தமிழக காவல்துறையில் முதல்முறையாக நிர்வாக வசதிக்காக உளவுத்துறை எஸ்பி பதவி 2 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு பணி குறித்து உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.
உளவுத்துறை எஸ்.பி:
தமிழகத்தில் அமைதியை பாதுகாப்பது, குற்றங்களை தடுப்பது மட்டுமல்லாமல் பல்வேறு பிரிவுகளில் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். உளவுத்துறைக்கு தற்போது கூடுதல் டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்களும், உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி மற்றும் உளவுப் பிரிவு டிஐஜியாக ஆசியம்மாள், எஸ்பியாக அரவிந்தன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். மாநில உளவுப்பிரிவில் தற்போது ஒரு எஸ்பி, 2 ஏஎஸ்பிக்கள், 12 டிஎஸ்பிக்கள், 85 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் தலைமை காவலர், காவலர்கள் என 609 பேர் தமிழகம் முழுவதும் பணியாற்றி வருகின்றனர்.
இந்தியாவில் ஒரே நாளில் 19,740 பேருக்கு கொரோனா தொற்று – 248 பேர் உயிரிழப்பு!
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகையின் காரணமாக குற்றங்களும் அதிகரித்துள்ளது. எனவே மாநில உளவுப்பிரிவு எஸ்பியின் பணிகளை 2 ஆக பிரிப்பது என்று முடிவு செய்யப்பட்டு அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது. அதனை ஏற்ற தமிழக அரசு மாநில உளவுத்துறையில் உள்ள எஸ்பி பதவிகளை 2 ஆக பிரித்து அரசாணை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் ஒருங்கிணைந்த குற்ற வழக்குகளை கண்காணிக்கும் பிரிவு எஸ்பி பதவியை உளவுப்பிரிவு பதவியாக மாற்றி உத்தரவிட்டுள்ளது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி உயர்வு – இன்றைய நிலவரம்!
அதனை தொடர்ந்து ஒருங்கிணைந்த குற்ற வழக்குகளை கண்காணிக்கும் பிரிவு எஸ்பி சரவணன் உளவுப்பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது உளவுத்துறைக்கு 2 எஸ்பிக்கள் உள்ள காரணத்தால் உள்துறை செயலாளர் பிரபாகர் அவர்களுக்கான பணிகளை ஒதுக்கீடு செய்துள்ளார். எஸ்பி சரவணன் அவர்களுக்கு ஒருங்கிணைந்த சென்னை மாநகரம் மற்றும் அரசியல் கட்சிகள், அரசியல் மற்றும் அரசியல் சாரா இயக்கங்கள் கண்காணித்தல், சமூக வலைதளங்கள் என 9 பிரிவுகளை கவனிக்கவும், காவல் கட்டுப்பாட்டு அறை, வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம், மேற்கு மண்டலம், மத்திய மண்டலம், போட்டோகிராபி பிரிவுகளில் உள்ள நிகழ்வுகளை கண்காணிக்க அரவிந்தன் அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.