செப்டம்பர் 1ம் தேதி 4, 5 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
ஹரியானா மாநிலத்தில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கான தொடக்கப் பள்ளிகளை மீண்டும் திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் கன்வர் பால் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஹரியானா மாநிலத்தில் கடந்த ஜூலை மாதத்திலிருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் துவங்கப்பட்டது. இருப்பினும் ஆன்லைன் வழியே வகுப்புகளும் தொடர்வதால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை அரசு கட்டாயமாக்கவில்லை. இதை தொடர்ந்து புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் 6 முதல் 8 வரையிலான வகுப்புகள் இம்மாதத்தில் திறக்கப்பட்டது.
ரேஷன் அரிசியை விற்பனை செய்வோர்க்கு பொருட்கள் விநியோகம் நிறுத்தம் – தமிழக அரசு!
இதை தொடர்ந்து தற்போது வெளிவந்துள்ள தகவலின் படி, வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கான தொடக்கப் பள்ளிகளை மீண்டும் திறக்க ஹரியானா அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மாநில கல்வி அமைச்சர் கன்வர் பால் வெளியிட்ட அறிக்கையில், மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் இருந்து எழுத்துப்பூர்வ அனுமதி பெற்று பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மாதம் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின்படி பள்ளிகள் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தல் – DEO உத்தரவு!
அதன் படி ஒரு மேசையில் மாணவர் மட்டுமே அமர அனுமதிக்கப்படுவார்கள். மேலும் உணவு அல்லது எழுதுபொருட்களை மாணவர்களுக்கு இடையே பகிர்வது தடைசெய்யப்பட்டுள்ளது. இரண்டு மாணவர்களுக்கிடையே குறைந்தது ஆறு அடி இடைவெளியை பராமரிக்க வேண்டும் எனவும் வகுப்பறைகளில் உள்ள மேசைகளில் மாணவர்களின் பெயர் எழுதப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பள்ளியின் நுழைவாயிலில் உடல் வெப்பநிலை பரிசோதனை மற்றும் கை சுத்திகரிப்பு உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மாணவர்கள் முகக்கவசங்கள் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.